கோவை, டிச.6 – கோவையில் பள்ளி கட்டிடத்தில் இருந்த தேன் கூட்டை கலைக்குமாறு தலைமை ஆசிரி யர் கூறிய நிலையில், தேன்கூட்டை கலைக்க முயன்ற சிறுவன் உடலில் தீப்பற்றி எரிந்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை அடுத்த ஆலாந்துறை பகுதியில் அரசு ஆரம்ப துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கணக் கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியின் கட்டிடத்தில் தேன்கூடு கட்டியிருந்துள்ளது. புதனன்று காலை பள்ளிக்கு வந்த ஐந்தாம் வகுப்பு மாண வனிடம் தலைமையாசிரியர் பழனிச்சாமி, கையில் தீப்பந்தத்தை கொடுத்து தேன் கூட்டை கலைக்குமாறு கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கையில் தீப்பந்தத் துடன் சென்ற சிறுவன் தேன்கூட்டை கலைக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக அவ ரது உடையில் தீ்ப்பற்றியது. இதில் மாணவ னின் அடிவயிற்றுப் பகுதியில் தீக்காயம் ஏற் பட்டு காயமடைந்தார். உடனடியாக சிறு வனை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். இதனைத்தொ டர்ந்து சிறுவன் கோவை அரசு மருத்துவம னைக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்ப வம் குறித்து, ஆலந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளியின் தலைமையா சிரியர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.