districts

img

4 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்

தருமபுரி, டிச.2- ரயில்வே தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால், 4  கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட் டதால், பொதுமக்கள் தண்டவாளத்தில், அமர்ந்து தர்ணா வில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள மோது குல அள்ளி கிராமத்தில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டி ருந்தது. இதன் வழியாக கரகதஅள்ளி, மோதுகுலஅள்ளி, காட்டம்பட்டி, சோமனஅள்ளி கிராமங்களைச் சேர்ந்த மாண வர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர், விவசா யிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், கரும்பு, மர வள்ளி கிழங்குகள் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் பிராதன வழி இந்த ரயில்வே கேட்  பாதையாகும். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரயில்வே கேட்டை மூடிவிட்டு, அப்பகுதியில் தரைப்பாலம் அமைக் கப்பட்டது. அவசரகதியில் அமைக்கப்பட்ட தரைப்பாலத் திற்கு அப்போதே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதனை கண்டுகொள்ளாத ரயில்வே நிர்வாகம்  பிடிவாதமாக தரைப்பாலத்தை அமைத்தனர். இந்நிலையில்  கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் தரைப்பாலத்தில் 10  அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. தேங்கிய நீர் வெளி யேற வழி இல்லாததால், அவ்வழியாக பொதுமக்கள் யாரும்  செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆவேசமடைந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மோது குலஅள்ளி ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து தர்ணா வில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன், வட்டாட் டசியர் ரஜினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, ரேணுகா  ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்ததை மேற் கொண்டனர். அப்போது மழைநீரை வெளியேற்றி போக்கு வரத்திற்கு வழிவகை செய்வதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதேபோன்று, பாலக்கோடு அருகே உள்ள பி.கொல்ல அள்ளி ஊராட்சிக்குட்பட்ட கம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இத னால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல் லூரி மாணவர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி, தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடு பட்டனர். மேலும், நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தராவிட்டால் தங்க ளுடைய ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து தொடர் போராட் டத்தில் ஈடுபடுவோம், என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.