மேட்டுபாளையம், ஏப். 18- கோடைகால சீசன் துவங் கியுள்ளதால், உதகைக்கு சுற்றுலா பயணிகள் அதிக ளவில் வருவார்கள் என்ப தால், நகர பகுதியில் வாகன நெருக்கடியை தவிர்க்க, மேட்டுப்பாளையத்தில் இரு மாதங்களுக்கு போக்கு வரத்து மாற்றம் செய்ய காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தாலும், பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறையினை முன்னிட்டு குளுகுளு பிரதேசமான உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பயணிகள் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், நீலகிரி மலையடிவார பகுதியான மேட்டுப் பாளையத்தின் பல பகுதிகள் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்ப தால், ஏப்.18 முதல் இரு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட் டுள்ளதாக கோவை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுலா வாகனங்கள் மேட்டுப்பாளையம் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. மாறாக, பாரத் பவன் சாலை, ரயில்வே நிலைய சாலை, சிவம் திரையரங்கம் சாலை, சக்கர வர்த்தி ஜங்சன் வழியாக உதகைக்கு செல்ல வேண்டும். உதகையில் இருந்து, கோத்தகிரி வழித்தடத்தில் வரும் சுற்றுலா வாகனங்கள் ராமசாமி நகர், பாலப்பட்டி, வேடர்காலனி, சிறுமுகை சாலை, ஆலங் கொம்பு ஜங்சன், தென்திருப்பதி, நால் ரோடு வழியாக கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும். நீலகிரியில் இருந்து குன்னூர் வழியாக வரும் வாகனங்கள் மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் சந்தைக்கடை, மோத்தே பாளையம், சிறுமுகை சாலை, ஆலங் கொம்பு, தென்திருப்பதி நால்ரோடு சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும், மேட்டுப் பாளையம் சிறுமுகை இடையே ஒருவழி பாதை மட்டுமே அனுமதிக்கப்படும். சத்தியமங்கலம் பண்ணாரி ஈரோட்டில் இருந்து சிறுமுகை வழியாக மேட்டுப் பாளையம் செல்ல விரும்புவோர் ஆலாங் கொம்பு- தென் திருப்பதி நால்ரோடு அன்னூர் சாலை வழியாக மேட்டுப்பாளையம் நக ருக்குள் அனுமதிக்கப்படுவர். மேட்டுப் பாளையத்தில் “நகர போக்குவரத்தை சீர மைக்கும் வகையில் தேவையான அளவிற்கு காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.