திருப்பூர், நவ. 21 - திருப்பூர் தெற்கு உழவர் சந்தை இயங்கும் நேரத்தில் கூட்டுறவு விற் பனை சங்க வளாகத்தில் வியாபா ரிகளுக்கு கடை அமைக்க அனுமதி அளித்து வெளியிட்டுள்ள அறி விப்பை ரத்து செய்யும்படி கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குநரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தென்னம் பாளையத்தில் தெற்கு உழவர் சந்தை இயங்கி வருகிறது. இந்த உழவர் சந் தைக்கு தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது விளைபொ ருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் உழவர் சந்தை வியாபாரத்தை பாதிக்கும் வகையில் வியாபாரிகள் சாலையோரமாக கடை அமைத்து விதிகளை பின்பற்றாமல் காலை நேரங்களில் வியாபாரம் செய்து வரு கின்றனர். இதனால் உழவர் சந் தைக்கு வரும் பொது மக்களின் வருகை குறைந்து,
விவசாயிகளின் விளை பொருட்களை விற்க முடி யாத நிலை உள்ளது. இந்நிலையில் பல்லடம் சாலை யில் உள்ள திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற் பனை சங்க வளாகத்தில் காலை 4 மணி முதல் 9 மணி வரை வியாபா ரிகள் கடை அமைத்துக் கொள்ள லாம் என கூட்டுறவு சங்கத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகியுள் ளது. இந்நிலையில் விவசாயிகள் பாது காப்பு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகசுந்தரம், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏபிடி எம்.மகா லிங்கம், திருப்பூர் மாநகர ஒருங்கி ணைப்பாளர் ரமேஷ் மற்றும் தெற்கு உழவர் சந்தை விவசாயிகள் ஆகி யோர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநரை நேரில் சந்தித்து உழ வர் சந்தை இயங்கும் நேரத்தில் கூட் டுறவு வளாகத்தில் வியாபாரிக ளுக்கு கடை அமைக்க வெளியிடப் பட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை பாதிக்கும் வகையில் வியாபா ரிகள் இங்கு கடை அமைக்க அனு மதிக்க கூடாது என மனு வழங்கப் பட்டது. இம்மனுவை பெற்றுக் கொண்ட மேலாண்மை இயக்குநர் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத் தும் வகையில் எந்த நடவடிக்கை களும் மேற்கொள்ள மாட்டோம், இது குறித்து பரிசீலனை செய்வோம் என தெரிவித்ததாக விவசாயிகள் கூறி யுள்ளனர்.