உடுமலை, ஆக. 7 - உடுமலை ரயில் நிலையம் அருகில் செயல்படும் அரசு டாஸ்மாக் கடை, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகள், மருத்துவமனை மற்றும் வர்த்தக நிறு வனங்களுக்கு இடையூறாக உள்ள தால் உடனடியாக அகற்ற வேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் புதனன்று நகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறையின ரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, உடுமலை நகராட்சி ராஜேந்திரா சாலை மத்திய பேருந்து நிலையம் செல் லும் பகுதியில் உள்ளது. இங்கு மத்திய அரசின் கேத்திர வித்தியாலயா பள்ளி, அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள் ளிகள், மாவட்ட கல்வித்துறை அலுவல கம், தமிழக அரசின் போட்டி தேர்வு வகுப் புகள், திருமூர்த்தி அணையின் பொது பணித்துறை அலுவலகம். மேலும் நான்கு முக்கிய மருத்துவமனைகள், ரயில் நிலையம், வார சந்தை, விவசா யிகள் விளைபொருள்களை விற்பனை செய்யும் கமிஷன் கடைகள் என எப்போ தும் பரபரப்பாக இருக்கும் பகுதி. மேலும், இங்கு உடுமலை நகராட்சிக்கு சொந்தமான அண்ணா பூங்காவும் உள் ளது. இது போதிய பராமரிப்பு இல்லாத தால், அதே பகுதியில் இருக்கும் அரசு டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் பூங்கா மற்றும் சாலைகளில் மது அருந்தி விட்டு பொது மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்ப டுத்தும் வகையில் நடந்து கொள்கின்ற னர். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை கள் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி யில் இருக்கும் வர்த்தக நிறுவனங்க ளுக்கு மக்கள் வர அச்சப்படுகிறார்கள். உடுமலை நகரின் முக்கியமான சாலை யில் அனைவருக்கும் இடையூறாக உள்ள அரசு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். மேலும், அண்ணா பூங்கா மற்றும் சாலையின் ஓரத்தில் மது அருந் துபவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துக்கும் மக்க ளுக்கு இடையூறாக இருக்கும் கடை களை அகற்ற உடுமலை நகராட்சி நிர்வா கம் மற்றும் காவல்துறை உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை ராஜேந்திரா சாலை வர்த்தகர்கள் மற் றும் இப்பகுதி பொதுமக்கள் மனு அளித் துள்ளனர். மேலும், உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், வரும் திங்கட்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித் துள்ளனர்.