மேட்டுபாளையம், ஏப்.15- மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான கோடை கால கூடுதல் சிறப்பு மலை ரயில் சேவை சனியன்று துவங்கியது. கோடை சீசன் ஆரம்பித்துள்ள நிலையில், இந்த சிறப்பு மலை ரயில் சேவை சுற்றுலா பயணிகளிடம் மகிழ்ச்சி யும், வரவேற்பும் பெற்றுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை வரை நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் தினசரி இயக்கப்பட்டு வரு கிறது. மேட்டுப்பாளையம் நிலை யத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்படும் மலை ரயில் பகல் 12 மணியளவில் உதகை சென்றடையும். மீண்டும் உதகையில் இருந்து பகல் 2 மணியளவில் புறப்பட்டு மாலை 5.40 மணியளவில் மேட்டுப் பாளையம் வந்தடையும். உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ள இம்மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தரு வது வழக்கம். சுற்றுலா பயணி களின் பெரும் வரவேற்பை பெற் றுள்ள இம்மலை ரயில் ஆண்டு தோறும் கோடை கால விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணி களால் நிரம்பி வழியும். மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி ஒரு முறை மட்டுமே மலை ரயில் இயக் கப்பட்டு வருவதால் கோடை விடு முறை காலத்தில் சுற்றுலா வரும் பலருக்கும் குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மலை ரயிலில் பயணிக்க டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடை வார்கள். இதனை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கோடை கால கூடுதல் சிறப்பு மலை ரயில் சேவை கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே துறையால் இயக்கப்பட்டு வரு கிறது. இவ்வாண்டும் வரும் கோடைகால விடுமுறைக்கு கூடுத லாக சிறப்பு மலை ரயில் இயக்கப் படும் என ரயில்வே நிர்வாகம் ஏற் கனவே அறிவித்தது. இதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரையி லான இடைப்பட்ட காலத்தில் வரும்
சனிக்கிழமைகளில் மட்டும் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளை யத்தில் இருந்து புறப்படும். இந்த கூடுதல் சிறப்பு மலை ரயில் மதியம் 2.25 மணிக்கு உதகை சென்ற டையும் என்றும், மீண்டும் அடுத்த நாள் ஞாயிற்றுகிழமை காலை 11.25 மணிக்கு உதகையில் புறப்படும் மலை ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி காலை 7.10 மணிக்கு வழக்கமான மலை ரயில் இயக்கப்பட கூடுதல் சிறப்பு மலை ரயில் முன்னரே அறிவித்தபடி காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலை யத்தில் இருந்து உதகைக்கு புறப் பட்டு சென்றது. இந்த கோடை கால கூடுதல் சிறப்பு மலை ரயில் சேவையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல் கோடை கால கூடுதல் சிறப்பு மலை ரயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலை யத்தில் இருந்து இயக்கப்பட்டதால் இதில் பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு ரயில்வே துறை சார்பில் சாக்லெட், பிஸ் கட் மற்றும் பழச்சாறு அடங்கிய பரிசு பை இலவசமாக வழங்கப் பட்டது. இந்த சிறப்பு மலை ரயிலின் முதல் வகுப்பு கட்டணம் ரூ.1575, இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ. 1065 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.