districts

img

தொடர் விடுமுறை எதிரொலி உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள்

உதகை, ஏப். 8- தொடர் விடுமுறை எதிரொலியாக  உதகை மலை பிரதேசத்திற்கு சுற்றுலா  பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.  இதன் ஒருபகுதியாக ஊட்டி தாவர வியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில்  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ளதாலும் தொடர் விடுமுறை காரணமாகவும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக குன்னூர்  சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, டால்பின் நோஸ் உள்ளிட்ட  இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து  காணப்படுகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா  வருகை அதிகமாக காணப்பட்டது. தமிழ்நாடு மற்றுமின்றி  கர்நாடக, கேரளா உள்ளிட்ட  மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பூங்காவில் உள்ள நூற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் தாவரங்களை கண்டு செல்கின்றனர்.‌ இதேபோன்று ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்  அதிகரித்து காணப்படுகிறது.