கோவை, ஏப்.21- கோவையில், 7 வயது சிறுவனுக்கு காலில் சூடு வைத்த தாயின் இரண்டா வது கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை - கோட்டை மேடுபகுதியை சேர்ந்தவர் சுல்தான் இப்ராஹிம். இவரது மனைவி சர்மதா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த முசாதிக் என்பவர் ஏற்கனவே திருமணமாகி மனைவி இறந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவைக்கு வந்து இங்கேயே தங்கி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இதனை அடுத்து சர்மதா முதல் கணவரை பிரிந்து முசாதிக்கை இரண்டா வது திருமணம் செய்து கொண்டு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் வசித்து வருகிறார். 7 வயது சிறுவனும் சர்மதாவுடனே வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி அச்சிறுவன் பள்ளிக்கு செல்ல வில்லை எனக் கூறி முசாதிக் தோசை கரண்டியால் சூடு வைத்த தாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மகனை பார்க்க வந்த சர்மதாவின் முதல் கணவர் இப்ராஹிம் மகனின் காலில் இருந்த காயத்தை பார்த்து இது குறித்து மகனிடம் கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுவன், முசாதிக் தனது காலில் சூடு வைத்து விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் தனது மகனுடன் கடைவீதி காவல் நிலையத்திற்கு சென்று முசாதிக் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் முசாதிக்கிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.