districts

img

தக்காளி ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை

நாமக்கல், ஜன.18- நாமக்கல் சந்தையில் தக்காளி கிலோ ரூ.40க்கு விற்பனையானது.  நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் தக் காளி செடி பரவலாக சாகுபடி செய்யப் படுகிறது. இங்கு விளையும் தக்காளி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இதைத்தவிர சேலம், தருமபுரி, கிருஷ்ண கிரி மற்றும் பெங்களூருவில் இருந்து தக் காளி நாமக்கல் சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.20க்கு விற்பளை செய்யப்பட்ட தக் காளி புதனன்று கிலோ ரூ.40க்கு விற்பனை யானது. ஒரே நாளில் தக்காளி விலை ரூ.20  அதிகரித்துள்ளது.