தருமபுரி, ஏப்.7- பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் தக் காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிக ளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ள னர். இவர்கள் அறுவடை செய்யும் தக்காளியை பாலக்கோடு மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங் கிருந்து தக்காளியை வியாபாரிகள் வாங்கி கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்களில் அனுப்பி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக பாலக் கோடு பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.3-க்கு விற்பனை யானது. இதனால் விவசாயிகள் தக்காளியை சாலையோரம் கொட்டி சென்றனர். பலர் தக்காளியை பறிக்காமல் தோட்டத் திலேயே விட்டனர். இந்நிலையில், வெயில் காரணமாக பாலக்கோடு பகுதி யில் தக்காளி சாகுபடி குறையத் தொடங்கியது. மேலும் ஆந்திரா, நாசிக் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்தது. இதனால் பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனையானது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.