districts

img

இருவழிச் சாலையில் சுங்கச் சாவடி அமைக்க கூடாது

தருமபுரி, ஆக.5- இருவழிச் சாலையில் சுங்கச் சாவடி அமைக் கக்கூடாது என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மத்திய தரை வழி போக்குவரத்துத் துறை  அமைச்சர் நிதின் கட்கரி யிடம் மனு அளித்தார்.  தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பூர்  முதல் மேட்டூர் வரையிலான தேசிய நெடுஞ் சாலையான 33 கி.மீட்டருக்கு தற்போது அகலப்படுத்தும் பணி நடைபெற்று வரு கிறது. அகலப்படுத்தும் பணி முடிந்தவுடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் தொப்பூர் முதல் மேட்டூர் வரையில் ஒரு இடத்தில் சுங்கச்சாவடியும், ஈரோடு மாவட்டத்தில் மற்றொரு சுங்கச்சாவடி அமைக்க தயாராகி வருவதாக தெரி கிறது. இதுபோன்ற இருவழிச் சாலையில்  சுமார் 1.5 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தி விட்டு, சுங்கச் சாவடி அமைப்பது என்பது  இச்சாலையை பயன்படுத்தும் பல நூறு  கிராம மக்களின் அன்றாடப் போக்கு வரத்தைப் பாதிக்கும். மேலும் நான்கு சக்கர வாகனங்கள், கார் மற்றும் மினி லாரிகள் போன்றவற்றின் போக்குவரத்து பாதிக்கும் தற்பொழுது விரிவாக்கம் செய் யப்படும் சாலை சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதற்கு தகுதி இல்லாத சாலை யாகும்.  இது வரை நான்கு வழிச் சாலையில் மட்டுமே தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுங்கச்சாவடிகள் அமைத்து வரு கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இரு வழிச் சாலை வழிப் பாதையிலும் சுங்கம் வசூலிப்பதை இப்பகுதி பொதுமக்கள் ஏற்றுக்  கொள்ளமாட்டார்கள். ஆகவே, தாங்கள் சுங்கச் சாவடி அமைப்பதை உடனடியாக கைவிட வேண்டும்.  ஏற்கனவே இது சம்பந்தமாக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரு முறை சென்னையில் அமைந்துள்ள தேசிய  நெடுஞ்சாலைத் துறையின் பொது மேலாளர்,  ஆகஸ்ட் முதல் வாரத்திலும், ஜூலை முதல் வாரத்திலும் புதுதில்லியில் அமைந்துள்ள தமிழ்நாடு பிரிவு முதுநிலை பொது மேலா ளர் ஆகியோரிடம் சுங்கச் சாவடி அமைக்கக்  கூடாது என கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன்.  எனவே, சுங்கச் சாவடி அமைக்கும் முடிவை  அமல்படுத்தக் கூடாது மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.