districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

புதுச்சேரியில் மாநில உரிமைகளை மீட்க  

தருமபுரி, செப்.20- உங்கரானள்ளி பகுதியில் அடிப்படை வசதிகளை  நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். அம்மனுவின் விபரம் வருமாறு, தருமபுரி ஒன்றியம் உங்கரானள்ளி ஊராட்சிக்குட்பட்ட ராமன்  நகர் மற்றும் ஜெய்நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 35 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் அருகில் உள்ள இப்பகுதியில், முறையான சாலை வசதி இல்லை,  மண்சாலை மழைகாலங்களில் சகதியுமாக மாறிவிடுகிறது. குடிநீர் வசதி இல்லை தெரு விளக்கு சுகாதார வளாகம் என எந்த அடிப்படை வசதியும் இல்லை. பல ஆண்டுகளாக இப்பகுதி கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகம், அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்பகுதிக்கு முறையான அடிப்படை வசதி செய்து  தர வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மகளுடன் தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்

ஈரோடு, செப்.20- மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் மகளுடன் தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் கோரிக்கை மனு அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள பி.மேட்டுப் பாளையம் பகுதியை சேர்ந்த 37 வயது பெண், தனது 14 வயது  மகளுடன் ஈரோடு ஆட்சியரிடம் மனு அளித்தார். இம்மனுவில்,  எனக்கு 14 வயதில் மகள் உள்ளார். எனது கணவர் அரசு போக்கு வரத்துக்கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். 2020  ஆம் ஆண்டு எனது கணவர் மது அருந்திவிட்டு என்னையும்,  மகளையும் அடித்து உதைத்தார். இதில் படுகாயம் அடைந்த தால் நான் கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். ஆனால் எனது கண வரும், குடும்பத்தினரும் எனக்கு சிகிச்சை அளிக்க விடாமல்  என்னை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து சென்றனர்.  அதன்பிறகு அவர்கள் என்னையும், மகளையும் வீட்டில் இருந்து வெளியேற்றினார்கள். நான் எனது மகளுடன் கவுந்தப்பாடியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.  இந்நிலையில் எனது கணவர் எனக்கும், மகளுக்கும் எந்தவொரு உதவியும் செய்வதில்லை. எனது கணவர் தாக்கி யதால் என் வயிற்று பகுதியில் பித்தப்பையிலும், குடலிலும்  பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்க  ரூ.7 லட்சம் செலவாகும் என்று மருத்துவகள் கூறுகிறார்கள்.  எனது தாய், தந்தையும் இறந்துவிட்டனர். கணவரும், அவரது  குடும்பத்தினரும் கைவிட்டு விட்டார்கள். என்னால் சிகிச் சைக்கான பணத்தை திரட்ட முடியாது. எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து  என்கிறார்கள். நான் உயிரிழந்துவிட்டால், எனது மகள்  அனாதையாகி விடுவாள். எனவே எங்களது சூழ்நிலையை கருத்தில் கொண்டு என்னையும், மகளையும் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவித் திருந்தார்.  மகளுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு  மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் மனு அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தார்ச்சாலை அமைக்கும் பணி

நாமக்கல், செப்.20- நாமக்கலில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்  தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளது.  நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதி களில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்  கீழ் சிவியாம்பாளையம் ஊராட்சியில் ரூ.43.93 லட்சம் மதிப்பீட்டில் 11 பணிகளும், வகுரம்பட்டி ஊராட்சியில் ரூ.57.19 லட்சம் மதிப்பீட்டில் 14 பணிகளுக்கும், சிலுவம்பட்டி  ஊராட்டசியில் ரூ.36.42 லட்சம் மதிப்பீட்டில் 8 பணிகளும், கோனூர் ஊராட்சியில் ரூ.38.48 லட்சம் மதிப்பீட்டில் 9  பணிகளை (மொத்தம் 42 பணிகள் ரூ.176.02 லட்சம் மதிப்பீடு)  நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் தொடங்கி  வைத்தார். மேலும், கோனூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மஞ்சள் பை மற்றும் வீடுகளுக்கு சென்று மக்கும் குப்பை  மற்றும் மக்காத குப்பை பிரித்து வழங்க நெகிழி தொட்டி களை வழங்கியும் சுகாதாரம் குறித்த பிரச்சார வாக னத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நாமக்கல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரா.சுமதி. வட்டார வளர்ச்சி அலுவலர் அருளாளன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிப்பை பாதியில் நிறுத்தியவர் தற்கொலை

கோவை, செப்.20- படிப்பை பாதியில் நிறுத் திய வாலிபர் தற்கொலை  கொண்ட சம்பவம் சோகத் தை ஏற்படுத்தியுள்ளது. கோவை விமான நிலையம் அருகே உள்ள  துரைசாமி நகரை சேர்ந் தவர் முருகேசன். இவரது மகன் குணாசுந்தர் (28)  கடந்த 2016 ஆம் ஆண்டு  படிப்பதற்காக ஆஸ்தி ரேலியா சென்றார். இதன் பின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கோவை திரும்பி நிலையில், கடந்த  சில மாதங்களாக  யாரிடமும்  பேசாமல் இருந்து வந்துள் ளார். இந்நிலையில், அவர்  ஓய்வு எடுக்க கோவில் பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்று,  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து கிராமப்புறங்களுக்கும் பேருந்துகளை முழுமையாக இயக்க சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், செப். 20 - திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து கிராமப்புறங்களுக்கும் பேருந்துகளை முழுமையாக இயக்குமாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், பல்லடம் ஒன்றியச்  செயலாளர் ஆர்.பரமசிவம் ஆகியோர்  செவ்வாயன்று அரசுப் போக்குவரத்துக் கழக கோவை மண்டல பொது மேலா ளரை நேரில் சந்தித்து அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது:  கொரோனா காலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு  கிராமப்புறம் மற்றும் புறநகரப்  பேருந்து சேவை  நிறுத்தப்பட்டது. இயல்பு நிலை திரும் பிய பிறகும் இதில் பல பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன.  இதனால் கிராமப்புற, நகர்ப்புற   மாணவ, மாணவிகள், தொழிலா ளர்கள், விவசாயிகள், மருத்துவம னைக்கு செல்ல வேண்டிய நோயாளி கள், அன்றாட வேலைக்கு பேருந்து பய ணத்தை நம்பி இருக்கக்கூடியோர் கடு மையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே நிறுத்தப்பட்ட அனைத்து வழித்தடப் பேருந்துகளையும் உடனடி யாக முழுமையாக இயக்குவதற்கு போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அத்துடன் திருப்பூரில் இருந்து  கோவை செல்வதற்கு பல்லடம்  மற் றும் அவிநாசி வழித்தடங்களிலும் போதிய பேருந்துகள் இயக்கப்படாமல் பற்றாக்குறை நிலை உள்ளது. இத னால் அன்றாடம் கோவை, திருப்பூர் பய ணம் மேற்கொள்வோர் மிகவும் சிரமப்ப டுவதுடன், அல்லாடும் நிலை ஏற்படுகி றது. எனவே திருப்பூர் - கோவை பேருந்து களை பல்லடம், அவிநாசி இரு வழித்த டங்களிலும் வழக்கமான எண்ணிக்கை பேருந்துகளையும், தேவைக்கு ஏற்ப  கூடுதல் பேருந்துகளையும் முழுமை யாக இயக்க வேண்டும்.  அதேபோல் திருப்பூர் கோவில்வழி  வழித்தடத்தில் இருந்து தென் மாவட் டங்களுக்கும் போதிய பேருந்துகள் இயக்கப்படாமல் ஒவ்வொரு நாளும், குறிப்பாக சனிக்கிழமை, முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகள் குறிப்பாக பெண்கள், முதியோர் இரவும், பக லும் நீண்ட நேரம் காத்திருந்து, பரித விக்கும் நிலை உள்ளது. எனவே தென்  மாவட்டங்களுக்கும் கூடுதல் பேருந்து களை பயணிகளின் தேவைக்கு இயக்க  அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

அரிவாளால் வெட்டியவர் கைது

திருப்பூர், செப். 20 - திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு (வயது 42) மற்றும் அவரது மகள் அமிர் நிஷா  (20) ஆகியோரை கடந்த ஞாயிறன்று அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி தலைமறைவானவரை காவல் துறையினர்  கைது செய்தனர். வழக்கறிஞர் ஜமீலாவும், அவரது மகளும் திருப்பூர் கும ரன் சாலையில் தமது அலுவலகத்தில் இருந்தபோது ஒருவர்  திடீரென உள்ளே புகுந்து அவர்களை அரிவாளால் வெட்டி  விட்டு தப்பி ஓடிவிட்டார். காவல் துறையினர் விசாரணையில்,  வெட்டி விட்டு தப்பி ஓடியவர் திருப்பூர் பெரிய தோட்டத்தை  சேர்ந்த  ரகுமான்கான் (25) என்பது தெரியவந்தது.  இதையடுத்து வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து  அவரை தேடி வந்தனர். மாநகர காவல் ஆணையர் உத்தரவின் படி மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் கேரளா  மாநிலம் வளி மேடு என்ற பகுதியில் வைத்து தனிப்படை  காவலர்கள் செவ்வாயன்று ரகுமான்கானை கைது செய்தனர்.  அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக பெண் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத் தைக் கண்டித்து தமிழ்நாடு புதுவை வழக்கறிஞர் சங்கத்தினர்  செவ்வாயன்று நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் திருப்பூர் நீதிமன்றங்களில் இரண்டாவது  நாளாக புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.

செப்.24ல் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்

திருப்பூர், செப். 20 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 24-ந் தேதி காலை 10 மணிக்கு அறை எண் 20-ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருக்கிறது.  விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட ஏது வாக வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும்  விவசாயிகளும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட் சியர் எஸ்.வினீத் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

சேலம், செப்.20- சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக் கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.  திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணி யாற்றி வருபவர் ஜமீலா பானு கடந்த இரண்டு நாட்க ளுக்கு முன்பு இவரின் மகளான சேலம் சட்டக் கல்லூரி யில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிஷா என்பவரை யும் திருப்பூரை சேர்ந்த வக்கீல் ரகுமான்கான் அறிவாளால் வெட்டினார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத் தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். நீதிமன்றத்திற்கு வழக்கறி ஞர்கள் செல்லாததால் நீதிமன்ற பணிகள் முழுமையாக பாதித்தது.

குப்பை தொட்டியில் மீட்கப்பட்ட கை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவருடையது

கோவை, செப்.20- துடியலூர் அருகே குப்பை தொட்டியில் கிடந்த ஆண் நப ரின் இடது கை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அழகு நிலைய ஊழியரின் கை என்பது கண்டறியபட்டுள்ளது. கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள வெள்ளக் கிணறு பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை மட்டும் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த  வழக்கு தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி  நாராயணனின் உத்தரவின் பேரில், துடியலூர் காவல் துணை  கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் மற்றும் 8 உதவி ஆய் வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில் ஈரோடு மாவட் டத்தை சேர்ந்த பிரபு (39) என்பவரது கை என கண்டறியப் பட்டுள்ளது. கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள அழகு நிலையத் தில் பணியாற்றி வந்த பிரபுவின் செல்போன் கடந்த செப்.15 ஆம் தேதியிலிருந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்த  வழக்கில் ஈரோடு போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இதனிடையே குப்பை தொட்டியில் கிடைத்த கை  பிரபுவின், கைதான் என்பதை உறவினர்கள் உறுதி செய்துள் ளனர்.

கோத்தகிரியில் உழவர் சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி

நீலகிரி, செப்.20- கோத்தகிரியில் உழவர் சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோத்தர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து பேரணியில் ஈடு பட்டனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கடை வீதி பகுதியில் ஏற்கனவே அனைத்து வசதி களுடன் அமைக்கப்பட்ட உழவர் சந்தை பயன்படுத்தப்படவில்லை. இதனால் மார்க் கெட் திடலுக்கு எதிரே நேரு பூங்கா வளா கத்தை ஒட்டி உள்ள 60 கடைகளை அகற்றி விட்டு, ஒரு ஏக்கர் பரப்பளவில் புதிய உழவர் சந்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு வியாபாரி கள், கோத்தர் இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், உழவர் சந்தையை  வேறு பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரு கின்றனர். இந்நிலையில், புதுகோத்த கிரியை சேர்ந்த கோத்தர் இன மக்கள் உழ வர் சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 6  கிலோ மீட்டர் பேரணியில் ஈடுபட்டனர். இதற்கு ஊர்த் தலைவர் மந்தோ சுப்பிர மணி தலைமை வகித்தார். புது கோத்தகிரி யிலிருந்து பாண்டியன் பூங்கா, பேருந்து நிலையம், மார்க்கெட் திடல் வழியாக காமரா ஜர் சதுக்கத்தில் பேரணி நிறைவுற்றது. இதுகுறித்து ஊர்த் தலைவர் மந்தோ சுப்பிரமணி கூறுகையில், நேரு பூங்கா வளாகத்தில் எங்களது பூர்வீக கோவிலான அய்யனோர் அம்மனோர் கோவில் அமைந் துள்ளது. நகரின் வளர்ச்சிக்காக நேரு பூங்கா  வளாகத்தில் 1.08 ஏக்கர் நிலம் கையகப்ப டுத்தப்பட்டு, அங்கு உழவர் சந்தை அமைக் கப்பட்டால், எங்களது கலாச்சாரம் சீர் குலைந்து விடும் அபாயம் உள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர், குடியரசு தலை வருக்கு மனுக்கள் அனுப்பி உள்ளோம். எனவே, நேரு பூங்கா மற்றும் காந்தி மைதா னம் உள்ள 6 ஏக்கர் நிலத்தில் வளர்ச்சி பணி களை மேற்கொள்ளாமல் தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

போதை மாத்திரைகளை விற்பனை: சிறுவன் உட்பட 4 பேர் கைது

கோவை, செப்.20- ரத்தினபுரி அருகே போதை மாத்திரை கள் விற்பனை செய்து வந்த ஒரு சிறுவன் மற்றும் இரண்டு கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள் ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், ரத்தினபுரி அருகே  உள்ள டாடாபாத் 9 ஆவது வீதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள் ளது. அதன்பேரில் ரத்தினபுரி காவல் துறையி னர் அப்பகுதியில் திடீர் சோதனை மேற் கொண்டனர். அப்போது சோதனையில் ஈடு பட்ட போலீசாரை கண்டதும் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தப்பி செல்ல முயன்ற னர். இதையடுத்து போலீசார் அவர்களை  சுற்றிவளைத்து பிடித்து, அவர்களிடம் நடத் திய சோதனையில் 4 பேரிடம் போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் இருந்தன. இதையடுத்து, போதை மாத்திரைகள் வைத் திருந்த ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த கல் லூரி மாணவர், கோவையில் தங்கி கல்லூரி யில் படித்து வரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவர், போதை மாத்திரைகளை பதுக்கி கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்யும் மருந்து கடை உரிமையாளர் கரி காலன் (49) மற்றும் 16 வயது சிறுவன் உள் ளிட்ட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், பிடிபட்ட மாணவர்களிடமிருந்து 3 வகையான போதை மாத்திரை அட்டை கள் என மொத்தம் 1,304 போதை மாத்திரை கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணை யில், இந்த மாத்திரைகள் கோவை நகரில் உள்ள சில கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரைகளை பரவலாக பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. மேலும், சிங்கா நல்லூரில் மருந்து கடை நடத்தி வரும் கரி காலன் கருக்கலைப்புக்கு பயன்படுத்தும் மாத்திரை, வலி நிவாரண மாத்திரை, நரம்பு நோய் பாதிப்புக்கான மாத்திரைகளை போதைக்காக மாணவர்களுக்கு வழங்கிய தும், 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட் டையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய் துள்ளது தெரியவந்தது. போதை மாத்திரைகளை வாங்கும் மாண வர்கள் கல்லூரி வளாகத்தில், வகுப்பறை யில் பயன்படுத்தியும், போதை மாத்திரை தேவைப்படும் நபர்களை குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரவழைத்து அங்கு மாத்திரை வழங்கி வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதியில் தேநீர் அருந்திய மாணவர்கள் மயக்கம்

கோவை, செப்.20- கோவை ராமநாதபுரம் மாநக ராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் 9 மாணவிகளுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் பெற் றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத் தியது.  கோவை ராமநாதபுரம் பகுதியில்  மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்று முதல் 12  ஆம் வகுப்பு வரை 743 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலை யில், செவ்வாயன்று பள்ளியில் எட் டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவருக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், அதே வகுப் பில் இருந்த சில மாணவிகளுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து 9 மாணவிகளையும் தனி மைப்படுத்திய ஆசிரியர்கள், உடன டியாக மாணவிகளின் பெற்றோர்க ளுக்கும் மாநகராட்சி சுகாதாரத்து றையினருக்கும் தகவல் அளித்தனர். இதனையடுத்து மாநகராட்சி அதிகா ரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டு உடல்நல குறைவு ஏற்பட்ட மாணவி களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மாணவிகள் அனைவரும் பெற்றோர்களுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவ லர் மருத்துவர் பிரதாப், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மருத்துவர் தமிழ்ச்செல்வன் உள் ளிட்டோர் பள்ளியில் உணவு, குடிநீர் மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள  சுகாதாரம் ஆகியவற்றை ஆய்வு செய் தனர். மேலும் அங்கு மாநகராட்சி வாகனம் மூலம் கொசு மருந்தும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து மாநகராட்சி சுகா தாரத்துறை அலுவலர் பிரதாப் கூறு கையில், உடல் நலக்குறைவு ஏற்பட்ட  மாணவிகள் அனைவரும் வீட்டிலி ருந்து உணவு மற்றும் தண்ணீர் எடுத்து வந்து பருகியவர்கள். பள்ளி வளா கத்தில் சத்துணவோ, தண்ணீரோ  உட்கொள்ளவில்லை. இரண்டு மாண விகள் மட்டுமே வாந்தி மயக்கம் கார ணமாக பாதிக்கப்பட்டனர். மற்ற மாணவிகள் இருமல், லேசான காய்ச் சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட னர். எதனால் மாணவிகளுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது என்பது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத் துறை, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை ஆகியவற்றின் சார்பில் மூன்று குழுக்கள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். 12 பேர் அடங்கிய மூன்று சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைத்து அனைத்து மாணவிகளுக்கும் உடல்நல பரிசோ தனை மேற்கொண்டு வருகிறோம், என்றார். இதேபோன்று கோவை சூலூர் அருகே உள்ள லட்சுமி நாயக்கன் பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதி உள்ளது. இங்கு தங்கி படிக்கும் மாணவர்கள் தேநீர் அருந்தி கொண்டிருந்தனர். அப் போது திடீரென வாந்தி எடுத்து மயக் கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாந்தி எடுத்த 12 மாணவர்கள் உட னடியாக சூலூர் அரசு மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்க ளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட் டது.  மாணவர்கள் குணமடைந்ததை தொடர்ந்து அனைவரும் பத்திரமாக பள்ளி விடுதிக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். பள்ளி விடுதியில் தேநீர் குடித்த மாணவர்கள் வாந்தி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. இதுகுறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

100 நாள் வேலை ஒருங்கிணைப்பாளர் பணி

ஈரோடு, செப். 20- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் கடந்த 08.11.2011ல் பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணி யாளர்களிடம் விருப்ப விண் ணப்பங்கள் பெறப்பட்டு அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட் டத்தின்கீழ் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப் பாளர் பணியிலும் மற்றும் கிராம ஊராட்சி தொடர்பான பணிகளிலும் கூடுதலாக ஈடு படுத்தப்பட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து 01.09.2022 முதல் 12.10.2022 வரை ஈரோடு மாவட்டத்தில் ணியில் சேராத தகுதியுள்ள முன்னாள் மக்கள் நலப்பணி யாளர்கள் மற்றும் அவர்க ளது வாரிசுதாரர்கள் முன்பே  கொடுக்கப்பட்ட விருப்ப விண் ணப்பங்களின் அடிப்படை யில் பணியில் அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது.