2013 ஆம் ஆண்டில் பிரதமர் வேட்பாளராக திருச்சிக்கு வருகை தந்த மோடியிடம், அப்போது திருப்பூர் தொழில் சந்தித்த நெருக்கடிக்கு என்ன செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பட்டி யலை உற்பத்தியாளர்கள் வழங்கினர். அதைப் பெற்றுக் கொண்ட மோடி, “கோரிக்கை பட்டிய லோடு வராதீர்கள், மாறாக திருப்பூர் பின்ன லாடை வர்த்தகத்தை ரூபாய் ஒரு லட்சம் கோடி யாக உயர்த்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற விபரத்துடன் வாருங்கள்” என்று கூறினார். இதைக் கேட்டு புல்லரித்துப் போன தொழில் முனைவோர் வெளிப்படையாகவே மோடியை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு என்ன செய்தார்? தமிழ் நாட்டின் வேலைவாய்ப்பு நகரம் என்ற பெயர் பெற்ற திருப்பூரை சீர்குலைத்து, நிலை குலைய செய்தார் என்பதுதான் அனுபவ உண்மை. 2013 ஆம் ஆண்டில் பிரதமர் வேட்பாளராக திருச்சிக்கு வருகை தந்த மோடியிடம், அப்போது திருப்பூர் தொழில் சந்தித்த நெருக்கடிக்கு என்ன செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பட்டி யலை உற்பத்தியாளர்கள் வழங்கினர். அதைப் பெற்றுக் கொண்ட மோடி, “கோரிக்கை பட்டிய லோடு வராதீர்கள், மாறாக திருப்பூர் பின்ன லாடை வர்த்தகத்தை ரூபாய் ஒரு லட்சம் கோடி யாக உயர்த்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற விபரத்துடன் வாருங்கள்” என்று கூறினார். இதைக் கேட்டு புல்லரித்துப் போன தொழில் முனைவோர் வெளிப்படையாகவே மோடியை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு என்ன செய்தார்? தமிழ் நாட்டின் வேலைவாய்ப்பு நகரம் என்ற பெயர் பெற்ற திருப்பூரை சீர்குலைத்து, நிலை குலைய செய்தார் என்பதுதான் அனுபவ உண்மை. பண மதிப்பு நீக்கம் என்ற மோடியின் அறி விப்பின் மூலம் முதல் அடி விழுந்தது. கால் தடுக்க வரிசையில் நின்ற நினைவுகள் மறந்து போகுமோ? குறிப்பாக லட்சக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட உழைப்பாளி மக்களும், ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில் முனை வோரும் அப்போது விழுந்த அடியில் இருந்து இன்று வரை எழ முடியவில்லை.
இரண்டாவது பிரச்சனை ஜிஎஸ்டி வரி விதிப்பு. ஏற்கனவே இருந்த காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவர முயன்றது தான் ஜிஎஸ்டி வரி. ஆனால் அவர்கள் சொன்னதற்கும், பிஜேபி அரசு செய்ததற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பதன் மூலம் ஒரு பொருளுக்கு அல்லது சேவைக்கோ பல முனை வரி செலுத்துவதற்கு மாறாக ஒரே ஒரு தடவை மட்டும் வரி செலுத்தினால் போதும் என்பதுதான் அதன் அடிப்படை. இதையும் மோடி அரசு, மிக நுட்பமாக, கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக அமல்படுத்தி யது. கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் கட்டுப் பாட்டில் இருக்கும் மூலப்பொருள், அவர்கள் மூலம் பெறக்கூடிய சேவை உள்ளிட்டவற்றுக்கு குறைவான வரி விதிப்பதும், அடுத்த அடுத்த நிலைகளில் பொருள் உற்பத்தி மற்றும் சேவை யில் ஈடுபடும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறு வனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பதும் என்று மோடி அரசு வரி முறையை மாற்றியது. இதன் நிகர கடைசி விளைவாக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த வரி முறையின் சுமை, கடைசியாக நுகர்வோர் தலையில் விழுகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பினால் விலை குறையும் என்று சொல்லப்பட்டது. ஆனால் விலை அதிக ரித்தது தான் உண்மை. அடுத்த அடி நூல் விலை உயர்வின் மூலம் வந்தது. பின்னலாடை உற்பத்திக்கு ஆதார மான பருத்தி நூல் விலை சற்றேறக்குறைய 90 சதவிகிதம் அதிகரித்தது. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு ஒரு சிறு முயற்சியை கூட ஒன்றிய அரசு எடுக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உண்ணாவிரதப் போராட்டம் மேற் கொண்டும், தொழில் அமைப்புகள் இந்த மேற்கு மாவட்டங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப் பினர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டும், ஒன் றிய அரசு திரும்பிக் கூட பார்க்கவில்லை. நூல் விலையைக் கட்டுப்படுத்த வெளிநாட் டில் இருந்து இறக்குமதி செய்யும் பருத்தி நூலுக்கு 11 சதவிகித இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று தொழில்துறையினர் தொடர்ந்து வற்புறுத்தியும், எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.
கொரோனா பொது முடக்க காலத்திலும், அதற்குப் பிற்பாடும் பின்னல் ஆடை தொழில் மற்றும் சார்பு நிறுவனங்கள், நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தன. வங்கிகள் மூலம் கடனுதவி குறைந்த வட்டியில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஒன்றிய அரசு நிறைவேற்ற வில்லை. அரைகுறையாக அறிவிக்கப்பட்ட சில சலுகைகளையும் பெரிய அளவிலான பின்ன லாடை நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. இப்படியாக கடந்த 10 ஆண்டு காலத்தில் திருப்பூர் பின்னலாடை தொழில் தொடர் நெருக் கடியில் சிக்கி சற்றேறக்குறைய 40 சதமான சிறு, குறு தொழில் நிறுவனங்களும், அதைச் சார்ந்த தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும், வரு மானமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. திருப்பூரில் தொழிலாளர்கள் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் கடன் வலையில் சிக்கிய வாழ்க்கை நடத்தும் நிலை உள்ளது. குழு கடன் என்ற பெயரில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவ னங்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி, தங் கள் வாழ்க்கை தேவையை சமாளிக்கும் நிலை யில் பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலைமை தரம் தாழ்ந்து உள்ளது. ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கு திருப்பூரின் பின்னலாடை ஜவுளி வர்த்தகத்தை உயர்த்து வதைப் பற்றி பட்டியல் கேட்ட மோடி, பிரதம ராக செயல்பட்ட 10 ஆண்டு காலத்தில் திருப்பூர் பின்னலாடை தொழிலை எந்த வகையிலும் கை தூக்கி விட உதவி செய்யவில்லை. மாறாக மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட் டுமே சலுகைகளை அள்ளிக் கொடுத்தது மோடி அரசு. திருப்பூர் பின்னலாடை தொழில்துறையும் ரிலையன்ஸ், ஆதித்ய பிர்லா குழுமம் போன்ற பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு மறை முகமாக உள்ளாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க, புலம்பெயர்ந்து இங்கு வந்து வேலை செய்யும் வட மாநிலத் தொழிலாளர்கள் பிரச்சனையிலும், பாஜக வினர் தங்கள் குறுகிய அரசியல் நோக்கத்திற் காக, வதந்திகளையும் வெறுப்பு பிரச்சாரத்தை யும் திட்டமிட்டு கிளப்பி திருப்பூரை சீர் குலைக்க முயன்றனர். உண்மையான பிரச்ச னைகளை திசை திருப்பி, புதிது புதிதாக கதை