ஈரோடு, ஜன.4- தியாகி ஜி.எஸ்.லட்சுமண அய்ய ரின் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தை சேர்ந்த தியாகி லட்சு மண அய்யர் தனக்கும், தனது குடும்பத் திற்கும் சொந்தமான 650 ஏக்கர் நிலத்தை ஏழை, எளிய மக்களுக்காக தானமாக கொடுத்து உதவினர். இதே போல், தற்போது கோபிச்செட்டி பாளையத்தில் இயங்கி வரும் பல அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட வைகள் லட்சுமண அய்யரால் வழங் கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டவைகள் தான். மேலும், பட்டியல் இன மக்கள், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகள் தங்கி படிக்க விடுதிகள் அமைத்துக் கொடுத்தார். இவ்வாறு அனைத்து தரப்பு மக்க ளுக்காக தொண்டாற்றிய தியாகி லட்சுமண அய்யரின் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக் கப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோபிசெட்டிபாளையத்தில் அவரது புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் கோபி வட்ட துணைத் தலைவர் பி.வெங்கிடு சாமி தலைமை வகித்தார். இதில், தியாகி லட்சுமண அய்யரின் மகன் சுந்தர வடிவேலு, மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணி யன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்ட தலைவர் மா.அண்ணா துரை, போக்குவரத்து ஊழியர் சங்க துணை தலைவர் என்.முருகையா உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.