districts

img

67 ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருப்பூர் வீரர்கள் சாதனை

திருப்பூர், ஜன.21 - டெல்லியில் டாக்டர்.கார்ணி சிங் ரேஞ்ச், ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆப் இந்தியா வளாகத்தில் நடைபெற்ற 67  ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிக ளில் பங்கேற்று வெற்றி பெற்ற பிளாட்டோஸ் ரைபில்  துப்பாக்கி சுடும் வீரர்கள் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜை திங்களன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். டெல்லியில் டாக்டர் கார்ணி சிங் ரேஞ்ச், ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆப் இந்தியா வளாகத்தில் நடைபெற்ற 67 ஆவது  தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பிளாட் டோஸ் ரைபில் துப்பாக்கி சுடும் வீரர்கள் அபார சாதனை புரிந் துள்ளனர். இதில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இப்போட் டியில் கலந்து கொண்ட ரைபில் வீரர்கள் நிகிடா ஹரிகி ருஷ்ணன் (ஷாட் கன்) அமுதன் குமரவேல், மெகரிஸ் ஜெய்ஷா மற்றும் ஆதியா குப்தா (பீப் ஸைட் ரைபில்) ஆகி யோர் (ரினௌவ்ன்டு சூட்டர்) என்ற பெருமை மிகு பட்டத்தைப்  பெற்றுப் திருப்பூருக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள் ளனர். இப்போட்டியில் கலந்து கொண்ட பிளாட்டோஸ் பள்ளி யில் பயிலும் தனிஸ்கா செந்தில் குமார் (12 ஆம் வகுப்பு) ஷாட்  கன் பிரிவில் தேசிய அளவில் 3 ஆவது இடம் பிடித்து  வெண்கலப் பதக்கம் வென்ற இவர் 4 முறை இந்தியன்  ஸ்குவாடு அணிக்கு விளையாடத்  தேர்வு செய்யப்பட்டுள் ளார். 14 மற்றும் 16 வயதிற்குட்பட்டோர் பென்டத்லான் மற்றும்  60மீ, 200மீ ஓட்டத்தில் பிரேமா.வி மாநில அளவிலும் தேசிய  அளவிலும் பதக்கங்களை வென்றுள்ளார். மேலும், முதல்வர்  கோப்பையில் 100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடம்  பிடித்து வெண்கல பதக்கம் வென்று ரூபாய் 50 ஆயிரம் பரிசுத்  தொகையும் பெற்றுள்ளார். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற  வீரர்கள் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜை திங்களன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்நிகழ்வில்,  மாவட்ட விளையாட்டு இளைஞர் நல அலு வலர்  ரகு குமார், பிளாட்டோஸ் ரைபிள் கிளப்பின் செயலா ளர் மற்றும் பிளாட்டோஸ் பள்ளி தாளாளர் ஹரி கிருஷ்ணன்  மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.