districts

திருப்பூர் கனிமவளத் துறை உதவி இயக்குநர் வள்ளல் சென்னைக்கு மாற்றம்

திருப்பூர், ஜூன் 8 – திருப்பூர் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் வள்ளல் சென்னை கனிமவளத் துறை அலுவ லகத்திற்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். கனிம வளத்துறை இணை இயக் குநர் கே.எல்.கே.வள்ளல் ஊழல் குற் றச்சாட்டுக்கு ஆளானவர். இந்நி லையில், திருப்பூர் மாவட்ட முன் னாள் ஆட்சியர் எஸ்.வினீத் இங்கி ருந்து பணி மாறுதல் அறிவிக்கப்பட்ட நிலையில், கே.எல்.கே.வள்ளலை பணி விடுவிப்பு செய்து உத்தரவு பிறப்பித்துச் சென்றார். எனினும் அவர் பணி மாறுதலாகி  சென்ற நிலையில், புதிய ஆட்சியராக  தா.கிறிஸ்துராஜ் பொறுப்பேற்ற போது, மாநில கனிமவளத் துறை  இயக்குநரகத்தில் இருந்து, வள் ளலை மீண்டும் திருப்பூர் உதவி இயக் குநராக அமர்த்தி உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. அதாவது பணி மாறுதல்  ஆகிச் செல்லும் மாவட்ட ஆட்சியர் கனிமவளத் துறை உதவி இயக்கு நரை பணி விடுவிப்பு செய்ய முடி யாது. கனிமவளத் துறைதான் இது  குறித்து நடவடிக்கை எடுக்க முடியும்  எனத் தெரிவித்து, வள்ளலை மீண்டும்  இங்கு பணி அமர்த்தினர். இது திருப்பூர் மாவட்டத்தில்  விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர் கள் உள்ளிட்டோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. வெட் டவெளிச்சமாகத் தெரிந்த ஊழல் அதி காரிக்கு மாநில கனிமவளத் துறை  உயரதிகாரிகள் ஆதரவாக செயல் படுவதாக பலரும் விமர்சித்தனர். அத் துடன் இந்த விசயத்தில் வஞ்சப் புகழ்ச்சியாக, ஊழல் அதிகாரிக்கு ஆதரவாக செயல்படுவதாக கனிம வளத்துறை அமைச்சர் துரைமுரு கன், கனிமவளத்துறை இயக்குநர் ஜெயகாந்தன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்துவதாக விவசா யிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறிவித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்து நிகழ்வில் பங்கேற்றவர்களை காவல் துறையினர் கைது செய் தனர்.  இந்த சூழ்நிலையில், கனிம வளத்துறை இயக்குநர் ஜெயகாந்தன் மாற்றப்பட்டு எல்.நிர்மல்ராஜ் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன், திருப் பூர் மாவட்ட உதவி இயக்குநர் கே. எல்.கே.வள்ளலை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த மாற்றத்துக்கு விவசாயிகள், சுற் றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட உதவி இயக்கு நராக ஜெ.வி.சச்சின் ஆனந்த் பொறுப்பு வகிப்பார் என்றும் கனிம வளத் துறை இயக்குநர் எல்.நிர்மல் ராஜ் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மாற்றம் உடனடியாக நடை முறைக்கு வருவதாகவும் கூறப்பட் டுள்ளது. அடுத்தடுத்து பணி விடுவிப்பு, மீண்டும் இங்கே பணி அமர்த்தல், தற் போது பணி இட மாற்றம் என ஊழல்  அதிகாரி வள்ளல் மாற்றப்பட்டிருப் பது நிர்வாகச் செயல்பாட்டில் உறுதி,  தெளிவின்மையை காட்டுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.