districts

img

பாஜக ஆட்சியால் திருப்பூருக்கு நேர்ந்த அவலத்தை அம்பலப்படுத்திய பாஜக வேட்பாளரின் ‘பூமராங்’

திருப்பூர், மார்ச் 25– -வே.தூயவன் பாரதிய ஜனதா கட்சியின் 10 ஆண்டு  கால ஆட்சியில் திருப்பூர் பின்னலாடை  ஜவுளித் தொழில் படுமோசமாக நலிவடைந்துள் ளது. தங்கள் சொந்த கட்சியின் ஆட்சியால் நேரிட்டி ருக்கும் இந்த அவலத்தை அம்பல்பபடுத்தும் விதத் தில் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் சட்டை  அணியாமல் பனியன் அணிந்து நூல் மற்றும் ஜமுக்காளத்துடன் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஜமுக்காளம், பருத்தி நூல் ஆகியவற்றை சுமந்து கொண்டு பனியன் அணிந்து வந்து, இந்த  தொழில் நலிவைப் போக்க, ஜவுளித் தொழிலைப்  பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி னார். ஆனால் பாஜக ஆட்சிக் காலத்தில்தான் உள் நாட்டு தொழில் குறிப்பாக பனியன், விசைத்தறி, ஜமுக்காளம் உற்பத்தி உள்ளிட்ட ஜவுளித் தொழில் மிக மோசமான நிலைக்குச் சென்றது. நூல் விலை  வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. மோடி அரசு அமல்படுத்திய கார்ப்பரேட் ஆதரவு கொள்கை காரணமாக உள்நாட்டு சிறு, குறு, நடுத்த ரத் தொழில்கள் கேட்பாரற்ற நிலையில் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக திருப் பூர், கோவை, ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட  மேற்கு மாவட்டங்களில் இருக்கும் ஜவுளித் தொழில் நூல் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப் பட்டபோது இங்குள்ள அனைத்து எம்.பி.க்களும் சேர்ந்து ஒன்றிய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். ஜவுளித் தொழில் துறையினரும் ஒன் றிய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுத்த னர். ஜவுளித் துறை அமைச்சர் பியூஸ் கோயல், நூல் விலையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டார். குறிப்பாக நூல் இறக்கு மதி வரி 11 சதவிகிதத்தை நீக்க வேண்டும் எனக் கேட்டபோது காது கொடுத்துக் கேட்கவில்லை. வங்கதேசத்தின் இருந்து தாராள இறக்குமதி அனு மதிக்கப்பட்டபோது, ஏராளமான ஆடைகள் இங்கு வந்து குவிந்தன. ஆனால் உள்நாட்டு ஜவுளித்  தொழிலைப் பாதுகாக்கவும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. அது மட்டுமின்றி திருப்பூர், கோவைக்கு வந்த  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளித் துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் இங்கு தொழில் துறை பிரச்சனையில் சிக்கி இருப்பதே தெரியாதது போல மறைத்துவிட்டு, திருப்பூர் வளர்ச் சிக்கு முன்மாதிரியாக இருக்கிறது என்று கூறினர். இதுபோல் பல திருப்பூர்களை உருவாக்க வேண் டும் என்றும் கூறினர்.  சொந்தமாக உழைத்து உயர்ந்த திருப்பூரை கைதூக்கி விட எதுவும் செய்யாமல் ஏறத்தாழ 40  சதவிகிதம் சிறு, குறு தொழில் முனைவோர் இந்த  தொழிலை விட்டே அப்புறப்படுத்தப்பட்டு விட்ட னர். மேலும் மோடி 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட் சிக்கு வருவதற்கு முன் திருப்பூர் ஏற்றுமதி வர்த்த கத்தை 2020ஆம் ஆண்டுக்குள் ரூ.1லட்சம் கோடி யாக உயர்த்துவதற்கு தேவையான கோரிக்கை யைத் தாருங்கள் என பட்டியல் கேட்டார். இங் குள்ள தொழில் துறையினர் நம்பி கோரிக்கைகளை  வைத்து அவரை வெளிப்படையாக ஆதரித்து வாக்கும் கேட்டனர். ஆனால் 2020 ஆம் ஆண்டு கடந்து 2025 ஆம் ஆண்டும் வரப்போகிறது. இப்போது வரை திருப் பூர் ஏற்றுமதி சுமார் 35 ஆயிரம் கோடியைத் தாண்ட வில்லை. மோடியின் வாக்குறுதியை நம்பி ஏமாற் றப்பட்டதை இங்குள்ள தொழில் துறையினர் மிகுந்த வேதனையுடன் மனதில் ஆறாத வடுவாக நினைவில் வைத்துள்ளனர். இப்போது பாஜக வேட் பாளர் முருகானந்தம் அவர்களது தலைவரைப் போலவே புதுப்புது வேஷம் கட்டி இங்குள்ள வர்களை ஏமாற்றலாம் என வந்திருக்கிறார். ஜமுக் காளத்தைக் கையில் தூக்கிக் கொண்டு வந்திருக்கி றார். ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று  சொல்வதைப் போல் தான் சொல்வதும் வடிகட்டிய பொய்தான் என்று காட்டுவதற்காக ஜமுக்காளத் தைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறரா? என்று திருப்பூர் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இனியும் ஏமாறத் தயாராக இல்லை, எந்த  வேஷம் போட்டு வந்தாலும் பாஜகவை கட்டாயம்  தோற்கடிப்போம் என்று திருப்பூர் தொழில் முனை வோரும், தொழிலாளர்களும் வாக்குப்பதிவுக்கு தயாராக காத்திருக்கின்றனர்.

 

திருப்பூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம், பின்னலாடைத் தொழிலுக்கு தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் எதுவும் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டுவதாகக் கூறிக்கொண்டு, தனது கட்சி ஆட்சிக்கே வேட்டு வைத்தார்.