districts

img

தமிழகத்திற்கு முன்மாதிரியாகத் திகழும் வனத்துக்குள் திருப்பூர்!

திருப்பூர், பிப்.20- திருப்பூர் மாவட்டத்தில் 8 ஆண்டுக ளில் 15 லட்சத்து 85 ஆயிரம் மரக்கன் றுகள் நட்டு பராமரித்திருக்கும், வனத் துக்குள் திருப்பூர் திட்டம் தமிழகத் திற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது.  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக வனத்துக்குள் திருப் பூர் திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 8 ஆண் டுகளில் திருப்பூர் மாநகராட்சி மற்றும் வனத்துக்குள் திருப்பூர் குழுவினர் இணைந்து 15 லட்சத்து 85 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டு பராமரித்து வருகின் றனர். வனத்துக்குள் திருப்பூர் திட்டத் தின் எட்டாம் ஆண்டு நிறைவு விழா  ஞாயிறன்று மாலை தாராபுரம் சாலை  வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திட்ட இயக்குனர் குமார் வரவேற்றார். திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபி னபு, திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன்  ஜெய்நாராயணன், பயிற்சி ஆட்சியர் பல்லவி வர்மா ஆகியோர் பங்கேற்ற னர். வெற்றி அமைப்பின் தலைவர் டி. ஆர்.சிவராம், திருப்பூர் ஏற்றுமதியாளர் கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணி யம், துணைத் தலைவர் இளங்கோ, பொதுச் செயலாளர் திருக்குமரன், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி, ராயல் கிளாசிக் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு  விருந்தினர்களாக மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், பூவு லகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ரா ஜன், ஓசை காளிதாசன் ஆகியோர் பங் கேற்றனர்.  இதில், முதல் நிகழ்ச்சியாக மரங் களை பாதுகாப்பதன் அவசியத்தை குறித்தும்,

நெகிழி இல்லா சுற்றுச்சூ ழலை உருவாக்கும் தேவையை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிக்கண்ணா அரசு கலை கல் லூரி நாட்டு நல திட்டம் அலகு இரண்டு  மாணவர்கள் நடன நிகழ்ச்சி நடைபெற் றது. இதைத் தொடர்ந்து மொபைல் போன்களில் இருந்து விடுபட்டு புத்தகங் களை வாசிக்க வேண்டும் என்று கூறும் கிட்ஸ் கிளப் பள்ளி குழந்தைகளின் வில் லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து கட்டாய கல்வியின் முக்கி யத்துவம் மற்றும் குழந்தை தொழிலா ளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு  நடனம் நிகழ்ச்சி மற்றும் பரத நாட்டி யம் நடைபெற்றது. இதையடுத்து இளை ஞர்களின் வாழ்வை சீரழிக்கும் சினிமா மற்றும் கதாநாயக வழிபாட்டினால் ஏற்ப டும் பிரச்சனைகள் குறித்து கிட்ஸ் கிளப்  பள்ளி மாணவர்களின் தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பெண்ணுரிமை களை பாதுகாக்க வேண்டும், ஆண் பெண் சமம் என்று உணர்த்தும் வகை யில் பெம் பள்ளி மாணவிகளின் நடன  நிகழ்ச்சி மற்றும் அப்பள்ளி மாணவர்கள்  நொய்யல் ஆற்றில் நடத்திய ஆராய்ச்சி கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் விதைகள் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வனத் துக்குள் திருப்பூரில் சிறப்பாக பங்காற் றிய விவசாயிகளுக்கு சிறப்பு விருந்தி னர்கள் நினைவு பரிசுகள் வழங்கினர்.