districts

img

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

உடுமலை, டிச.9- திருப்பூர் மாவட்டம் உடுமலை மகளிர் திட்ட வட்டார வள அலுவலகம்  சார்பில் பெண் களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி நவம்பர் 25 முதல் டிசம் பர் 23 வரை நடத்த அறிவுறுத்தப்பட்டு, ஒவ் வொரு ஊராட்சிகளிலும் விழிப்புணர்வு பேர ணிகள் நடத்தப்பட்டு வருகிறது.  உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சிக்குட்பட்ட  இராகல்பாவி கிராமத் தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற் றது. விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாண வர்களிடம் ஆண் பெண் பாகுபாடின்றி, பாலின சமத்துவத்தை வளர்க்க வேண்டும் , பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்க  வேண்டும், பெண்களுக்கு எதிரான  வன் முறை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வினை ஏற்ப டுத்த வேண்டும் என்று உடுமலை மகளிர் திட்ட  வட்டார வள பயிற்றுநர் ஸ்ரீ நிஜா எடுத்துக் கூறி னார்.  இதைதொடர்ந்து பள்ளி மாணவர்கள்,  ஊர் பொதுமக்கள் இணைந்து பெண்க ளுக்கு எதிரான பாலின சமத்துவத்தை வளர்ப் போம், பெண்களுக்கு எதிரான வன்முறை களை ஒழிப்போம் ஆகிய வாசகங்களை அடங்கிய பதாகைகளுடன்  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியர் சாவித்திரி துவக்கி வைத் தார். ஆசிரியர் கண்ணபிரான் நன்றி கூறினார்.  நிகழ்வில் இராகல்பாவி சமுதாய வள பயிற்று னர் கல்பனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.