districts

img

திருப்பூர் மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

திருப்பூர், நவ. 25 - திருப்பூர் தாராபுரம் சாலை ஜெய்  ஸ்ரீராம் கல்லூரியில் மாவட்ட அளவி லான தேசிய குழந்தைகள் அறிவி யல் மாநாடு வியாழனன்று நடை பெற்றது. மாணவர்களின் அறிவியல் ஆய் வுத் திறனை வளர்க்கும் பொருட்டு  ஒன்றிய அரசின் தொழில்நுட்பத் துறை மற்றும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு அமைப்பு ஆகி யன இணைந்து தேசிய குழந்தை கள் அறிவியல் மாநாட்டை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றன.  இம்மா நாட்டை தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அறிவியல் இயக் கம் ஒருங்கிணைத்து நடத்தி வருகி றது.  30ஆவது ஆண்டாக நடைபெற்ற  இம்மாநாட்டில் 10 வயது முதல் 12  வயது வரை உள்ள மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும், 13 வயது  முதல் 17 வயது வரை உள்ள மாண வர்கள் சீனியர் பிரிவிலும் தங்களது  ஆய்வை மூன்று மாத காலம் செய்து அதன் அறிக்கையை சமர்ப்பித் தனர். இவ்வாண்டு “உடல்நலம் மற்றும்  நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்ளுதல்” என்ற கருப்பொருள் சார்ந்த தலைப் பில் மாணவர்கள் தங்கள் ஆய்வு களை செய்தனர். அவிநாசிபாளை யம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல் லூரியில் நடைபெற்ற மாவட்ட குழந் தைகள் அறிவியல் மாநாட்டில் 284 மாணவர்கள் கலந்து கொண்டு 142 ஆய்வுகளை சமர்ப்பித்தனர். மாணவர்கள் சமர்ப்பித்த ஆய்வு களில் இருந்து நடுவர்கள் தேர்ந்தெ டுத்த 15 ஆய்வுகள் தூத்துக்குடியில்  நடைபெறவுள்ள மாநில குழந்தை கள் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக் கப்பட உள்ளது. 

ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூ ரியில் நடைபெற்ற மாவட்ட மாநாட் டில் கல்லூரி பேராசிரியை ரேவதி வர வேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு  அறிவியல் இயக்கத் துணைத் தலை வர் சக்திவேல் மற்றும் மேனாள் ஒருங் கிணைப்பாளர் ஈஸ்வரன் ஆகியோர்  தலைமை தாங்கினர். தேசிய குழந்தைகள் அறிவியல்  மாநாடு கல்வி ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் மற்றும் ஜெய்ஸ்ரீராம் கல் லூரி நிர்வாக அலுவலர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெய்ஸ்ரீராம் கல்லூரி தலைவர்  கோவிந்தசாமி மற்றும் தமிழ்நாடு அறி வியல் இயக்கம் மாநில செயலாளர் தியாகராஜன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாநில குழந்தைகள் அறிவியல்  மாநாட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 15  ஆய்வுக் கட்டுரைகளையும் அவற்றை செய்த மாணவர்களையும்  பள்ளியையும்  மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீராம்குமார் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கார்த்தி கேயன் ஆகியோர் அறிவித்தனர். 

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட மாண வர்களுக்கும், 75க்கும் மேற்பட்ட வழி காட்டி ஆசிரியர்களுக்கும், 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும் சான்றிதழ் கள், பதக்கங்கள் மற்றும் கேடயங் கள், ஜெய்ஸ்ரீராம் கல்லூரி மற்றும்  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் வழங்கப்பட்டன.  இவ்விழாவில் 40க்கும் மேற்பட்ட  அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச்  சேர்ந்த மாணவ மாணவிகளும், ஆசி ரியர்களும், பெற்றோர்களும் கலந்து  கொண்டனர்.  இறுதியாக மாவட்ட செயலாளர்  கௌரிசங்கர் நன்றி கூறினார். மேற் கண்ட விவரங்களை தேசிய குழந் தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம்குமார் தெரிவித்தார்.