திருப்பூர், ஆக. 19 - திருப்பூர் மாநகராட்சி இடுவம் பாளையத்தில் மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் மனித எலும்பு கள் சாலை ஓரத்தில் கிடந்ததால் வெள்ளியன்று பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சி 40ஆவது வார்டுக்கு உட்பட்ட இடுவம்பாளை யம் பகுதியில் உள்ள மயானத்தில் போதுமான இடவசதி இல்லாததால் சடலங்களைப் புதைப்பதற்கு நெருக் கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற் கனவே புதைக்கப்பட்ட உடல்களை எடுத்துவிட்டு அதே குழிகளில் மீண் டும் புதிய உடல்களை புதைப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழனன்று அப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இறந்த நிலையில் அவரின் உடலை புதைப்பதற்கு கொண்டு வந்துள்ள னர். அப்போது குழியில் இருந்து எடுக் கப்பட்ட பழைய எலும்புகள் மீண்டும் புதைக்கப்படாமல் வெளியிலேயே கிடந்ததாக கூறப்படுகிறது. இதைய டுத்து வெள்ளியன்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாய்கள் கூட்ட மாக எலும்புகளை சாலைக்கு இழுத்து வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மாநக ராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். மாந கராட்சி பணியாளர் எலும்புகளை மீண்டும் புதைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் 1000த்திற்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகிறோம். இத்தனை குடும்பங்களும் இந்த 7 செண்ட் இடத் தில்தான் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும். இவ்வளவு குடும் பங்களுக்கு எப்படி இந்த இடம் போது மானதாக இருக்கும். இடவசதி இல் லாததால் அடக்கம் செய்த குழிக ளைத் தோண்டி மீண்டும் அதே குழி களில் உடல்களை அடக்கம் செய்து வருகிறோம். மேலும் சுற்றுசுவர் இல் லாததால், அவ்வப்போது நாய்கள் எலும்புகளை சாலையில் கொண்டு வந்து போட்டுவிடுகின்றன. காலை யில் எழுந்தவுடன் மனித எலும்பு களைப் பார்க்க வேண்டி வருகிறது. பல ஆண்டுகளாக இம்மயானத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டித் தர கோரிக்கை வைத்து வருகிறோம். அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த னர். இதுகுறித்து 40 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபத்ராதேவி ஆனந்தன் கூறுகையில், இடுவம்பா ளையத்தில் ஆரம்பத்தில் 100 குடும் பங்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை மயானத்தைச் சுற்றி சுற் றுச்சுவர் அமைக்க வேண்டும் என் பது. அதற்கு மாநகராட்சி மேயரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.மாமன்ற உறுப்பினர் நிதியில் விரைவில் பணி கள் தொடங்கப்படும். மேலும் இப்ப குதி மக்கள் தேவையை பூர்த்தி செய் யும் வகையில் அருகாமையில் உள்ள முருகம்பாளையத்தில் அடுத்த மாதம் மின் மயானம் திறக்கப்பட உள் ளது எனத் தெரிவித்தார்.