திருப்பூர், மார்ச் 6 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்ப ணித் திட்டம் அலகு-2 மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை இணைந்து கண் பரிசோதனை முகாம் நடத்தினர். திங்களன்று இக்கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் பேரா சிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நடத்தப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்கு மார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்து டன் கலந்து கொண்டதில் கண்புரை, நரம்பு சம்பந்தமான கண் வியாதிகள், கண்ணில் சதை வளர்ச்சி போன்றவை கண்டறிப் படு, அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ பிரதிநிதிகள் சுந்தரம், பாலசுப் பிரமணியம், ரமேஷ், பாலாஜி ஆகியோர் தலைமையில் 500க் கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளும், பேராசிரி யர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.