districts

img

திருப்பூர் சிபிஐ வேட்பாளர் கே.சுப்பராயன் கூட்டணி கட்சி நிர்வாகிளுக்கு நன்றி தெரிவிப்பு

ஈரோடு, ஏப்.26-  திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி யில் இந்தியா கூட்டணி சார்பில் போட் டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் கே.சுப்பராயன் தனக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்த கூட்டணி கட்சி நிர் வாகிளுக்கு நன்றி தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை தேர்தல் பணிமனையில் திமுக பெருந்துறை தெற்கு ஒன்றியச் செய லாளர் கே.பி.சாமி தலைமையில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற் றது. இதில் திமுக ஒன்றியச் செயலா ளர்கள் பி. சின்னசாமி (பெருந்துறை  வடக்கு), சி.பெரியசாமி (பெருந் துறை கிழக்கு), பி.செங்கோட்டை யன் (சென்னிமலை வடக்கு) ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  இக்கூட்டத்திற்கு திருப்பூர் நாடா ளுமன்ற தொகுதியில் இந்தியா கூட் டணி சார்பில் போட்டியிட்ட இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே. சுப்பராயன் தனக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரிக்க கடந்த  ஒரு மாத காலத்திற்கும் மேலாக அல் லும் பகலும் அயராது பாடுபட்ட, தேர் தல் பரப்புரை மற்றும் தேர்தல் பணி களில் அர்ப்பணிப்போடு ஈடுபட்ட திரா விட முன்னேற்றக் கழக தலைமையி லான இந்தியா கூட்டணி கட்சிகளின்  நிர்வாகிகளான திமுக, காங்கிரஸ், சிபிஐ(எம்), மதிமுக, கொமதேக, விசிக, மக்கள் நீதி மய்யம், இந்திய  யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய  மக்கள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, திரா விடர் கழகம், தமிழ் புலிகள் கட்சி, ஆதி  தமிழர் பேரவை உள்ளி்ட்ட கூட்டணி  கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி,  வட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், தேர்தல் பணி பொறுப்பாளர்கள், மக் கள் பிரதிநிதிகள், தகவல் தொடர்பு பொறுப்பாளர்கள், தொழிற் சங்கங் கள், விவசாய சங்கங்கள், மாதர், இளைஞர், மாணவர், கலை இலக்கி யம் உள்ளிட்ட சார்பு அமைப்புக ளின் நிர்வாகிகளுக்கு இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் வேட்பாளர் சார் பில் நன்றி தெரிவித்தார்.  இக்கூட்டத்தில் பி.செங்கோட் டையன், சி.பெரியசாமி (திமுக), வழக்குரைஞர் சி.காந்தி (காங்கி ரஸ்), மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயலாளர் ஆர்.ரகுராமன், எஸ்.டி. பிரபாகரன் (சிபிஐ), வி.எம்.கந்தசாமி  (மதிமுக), ஈ.கே.கிருஷ்ணமூர்த்தி (கொமதேக), வி.விஜயபாலன் (விசிக), பி.ஆர்.முருகன் (மக்கள் நீதி  மய்யம்), டி.சுனிதா (ஆம் ஆத்மி  கட்சி), சி.எம்.துளசிமணி, எஸ்.சின்ன சாமி (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் பெருந்துறை ஒன்றியம் மற் றும் சென்னிமலை ஒன்றியப் பகுதி இந்தியா கூட்டணி கட்சிகளின் வட்ட,  ஒன்றிய தலைவர்கள், தேர்தல் பணி  பொறுப்பாளர்கள், முன்னணி நிர்வா கிகள், மாவட்ட ஊராட்சி குழு உறுப் பினர், ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பி னர்கள், பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர் கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.