districts

img

மக்களின் பண்பாட்டு திருவிழாவாக 21 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா ஜன.23ல் தொடக்கம்

திருப்பூர், ஜன.20 – தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வா கம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து 21 ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவை காங்கேயம் சாலை, வேலன் ஓட்டல்  வளாகத்தில் நடத்துகின்றனர். வரும், ஜன.23  ஆம் தேதி துவங்கி பிப்.2 ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. முதல்நாள் வியாழனன்று மாலை 5 மணிக்கு மாநில தமிழ் வளர்ச்சி, செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனி தவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடக்கி  வைத்து உரையாற்றுகின்றனர். நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள், மாநகர மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதி நிதிகள் பங்கேற்கின்றனர். விருந்து படைக்கும் நிகழ்வுகள் இப்புத்தக கண்காட்சி நாள்தோறும் காலை, 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை  நடைபெறும். ஒவ்வொரு நாளும் மாலை  கலை, இலக்கிய நிகழ்வுகள் நடைபெறு கின்றன. இரண்டாம் நாள் ஜன.24 அன்று  ”நயம்பட உரை” என்ற தலைப்பில் திரைப்பட  இயக்குனர் கரு.பழனியப்பன், 25ஆம் தேதி  எங்கோ, யாரோ, யாருக்காகவோ என்ற தலைப்பில் பவா.செல்லதுரை, கற்க கசடற  என்ற தலைப்பில் பேராசிரியர் நசீரா ஆகி யோர் பேசவுள்ளனர். 26ஆம் தேதி நாமி ருக்கும் நாடு நமதென்பதறிவோம் என்ற தலைப்பில் பாலசந்திரன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு)  பேசுகிறார். 27 ஆம் தேதி கவிஞர் நெல்லை  ஜெயந்தா குழுவினரின் கவியரங்கம், 28ஆம்  தேதி திருப்பூர் காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன், காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஸ் அசோக், திருப்பூர் மாநக ராட்சி ஆணையர் எஸ்.ராமமூர்த்தி ஆகியோர்  பங்கேற்று, கலை இலக்கியத் திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாண விகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசுகின்ற னர். 29 ஆம் தேதி, திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின்  சார்பில் பரிசளிப்பு விழா நடக்கிறது. இதில்,  வையத் தலைமை கொள் என்ற தலைப்பில்  ஜெகத் கஸ்பர் பேசுகிறார். 30ஆம் தேதி  சிந்துவெளி நாகரிகம் -100 என்ற தலைப்பில்  எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், பக்கம் பக்க மாய் வாழ்க்கை என்ற தலைப்பில் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகின்றனர், 31 ஆம்  தேதி குடியுயர கோன் உயரும் என்ற தலைப் பில் தமிழக அரசின் திட்டக்குழு துணைத்  தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், அணையா விளக்கு என்ற தலைப்பில் பாரதிதாசன் பல்க லைக்கழகப் பேராசிரியர் உ.அலிபாவா ஆகி யோர் பேசுகின்றனர். பிப்.1 ஆம் தேதி மறைக் கப்பட்ட விடுதலை போராட்டத் தியாகிகள் என்ற தலைப்பில் கவிஞர் ஜீவபாரதி, இலக்க ணம் என்பது மொழியின் அறிவியல் என்ற  தலைப்பில் கவிஞர் மகுடேஸ்வரன் ஆகி யோர் பேசுகின்றனர், நிறைவு நாளான, பிப்.2  ஆம் தேதி மாலை 6 மணிக்கு இலக்கியங் களை நாம் கற்பது: இன்புற்று மகிழே!, பின் பற்றி வாழவே! என்ற தலைப்பில் முனைவர்.  கு.ஞானசம்பந்தன் குழுவினரின் பட்டிமன் றம் நடைபெற உள்ளது. 150 அரங்குகள் அமைகின்றன தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களின் 70 பதிப்பகங்கள், வெளியீட்டாளர்கள் உள் ளிட்ட 150 அரங்குகள் அமைக்கப்பட்டு வருகி றது. மேலும், கண்காணிப்பு கேமரா கட்டுப் பாட்டு அறை, ஓய்வறை, மாற்றுத்திறனாளி கள் புத்தகங்கள் வாங்க ஏதுவாக வீல்சேர் வசதி, தீயணைப்பு வண்டியுடன் கூடிய தீய ணைப்பு அறை, மருத்துவ அறை, வந்து செல்லும் இரு மற்றும் நான்கு சக்கர வாக னங்கள்  நிறுத்தும் இடம் உள்ளிட்ட வசதிகள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சி அறை குலுக்கள் முறையில் தேர்வு செய்யப் படவுள்ளது. ஜன.22 ஆம் தேதி குலுக்கல் நடைபெறுகிறது. மேலும், நூலகத் துறை,  கல்வித் துறை உள்பட 10 அரசு துறை அரங் கங்கள் அமைய உள்ளன. சிற்றுண்டி கேண் டீன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களை ஈர்க்க முயற்சி இப்புத்தக கண்காட்சியை மாணவ, மாண விகள் இடையே கொண்டு செல்லும் வகை யில் மாவட்டம் முழுவதும் 29 மையங்களில்  கவிதை, ஒவியம் வரைதல், கட்டுரை உள் ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 12  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் கலந்து கொண்டுள்ளனர். பல பள்ளிக ளில் இயக்கங்கள் நடத்தி மாணவ, மாணவி கள் புத்தகங்கள் வாங்க விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் 10 ஆயிரம் உண்டியல்கள்  வழங்கப்பட்டுள்ளன. மேலும், தினசரி புத்தக  கண்காட்சியில் குலுக்கள் முறையில் தேர்வு  செய்யப்படும் மாணவர்களுக்கு டோக்கன் வழங்கப்படவுள்ளது. அதன் மூலம் ரூ.500  க்கான புத்தகங்களை இலவசமாக வாங்கிக்  கொள்ளலாம்.   சென்னை புத்தகக் கண்காட்சி முடிந்தவு டன் திருப்பூரில் புத்தக கண்காட்சி நடைபெற  உள்ளதால், அங்கு பிரத்யேகமாக விற்கப் பட்ட புத்தகங்கள் அனைத்தும் இங்கு கிடைக்கும். மேலும் ரூ.1000க்கு புத்தகம் வாங்கினால், நூல் ஆர்வலர் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். மாணவ, மாணவி கள் பொதுமக்கள், புத்தக ஆர்வலர்கள் திருப் பூரில் நடைபெறும் 21 ஆவது புத்தக கண்காட் சிக்கு வந்து பயன்பெறுமாறு புத்தக திருவிழா  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.