districts

img

திருப்பூர்: 93 தீக்கதிர் சந்தா தொகை ஒப்படைப்பு

திருப்பூர், நவ.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நெருப்பெரிச்சல் மற்றும் கரு வம்பாளையம் கிளைகள் சார்பில் 93 தீக்கதிர் சந்தாத்தொகை வழங்கப் பட்டது. தீக்கதிர் சந்தா வழங்குதல் மற் றும் நவம்பர் புரட்சி தின பேரணி, பொதுக்கூட்ட தயாரிப்பு பேரவைக் கூட்டம் ஞாயிறன்று கூலிபாளை யம் பகுதியில் நடைபெற்றது. இப் பேரவை கூட்டம் வாவிபாளையம் கிளைச் செயலாளர் ஆர்.பாலசுப்ர மணியம் தலைமையில் நடைபெற் றது. நெருப்பெரிச்சல் பகுதி தோட் டத்துப்பாளையம், வாவிபாளையம், சமத்துவபுரம் ஆகிய கிளைகள் சார் பில் பகுதிகளில் சேர்க்கப்பட்ட 63  தீக்கதிர் சந்தாவிற்கான தொகையை முதற்கட்டமாக மாநில குழு உறுப்பி னர் கே.காமராஜ் வசம் ஒப்படைக் கப்பட்டது. சந்தாவைப் பெற்றுக்  கொண்டு காமராஜ் பேரவை கூட் டத்தில் சிறப்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் எஸ்.முத்துக் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர்  ஆ.சிகாமணி, ஒன்றிய குழு உறுப்பி னர் எஸ்.பானுமதி, கிளைச் செயலா ளர்கள் இ.மங்கலட்சுமி, எம்.தன ராஜ், எம்.சந்திரன் உள்ளிட்ட ஏராள மானவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேரணி, பொதுக் கூட்டத்திற்கு கட்சி தோழர்கள் குடும்பத்தோடு பங்கேற்பது எனவும், தீக்கதிர் சந்தா 100 என்பதை இலக் காக வைத்து களப் பணியாற்றுவது என்ற அடிப்படையில் முடிவு செய் யப்பட்டது. பேரவை கூட்டத்தில் கூலி பாளையம் பகுதியில் செயல்படா மல் உள்ள ரயில் நிலையத்தை மீண் டும் ரயில்கள் நின்று செல்ல ஒன்றிய  அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நிறைவாக ராஜன் நன்றி கூறினார். இதேபோல், கருவம்பாளையம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகளின் சிறப்பு பேரவை ஞாயி றன்று பூச்சக்காடு வி.கே.அப்பேர்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதில் 30 தீக்கதிர் சந்தாவிற்கான தொகை மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண் ணனிடம் வழங்கப்பட்டது.