திருப்பூர், டிச.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்டக்குழு சார்பில் நடத்தப்பட்டு வந்த கம்யூனிச இயக்கத்தின் வளர்ச்சி பாதை என்ற தலைப்பிலான காலை நேர தொடர் வகுப்பு சனியன்று நிறைவுபெற்றது. சிபிஎம் திருப்பூர் மாவட்டக்குழு சார் பில் 12 ஆவது ஆண்டு காலை நேர தொடர் வகுப்பு தியாகி பழனிசாமி நிலையத்தில் கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் 1848 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதல் 1871 பாரிஸ் கம்யூன் வரை என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு பேசினார். புதன்கி ழமை இரண்டாம் நாள் வகுப்பில், 1871 பாரிஸ் கம்யூன் முதல் 1917 ரஷ்ய புரட்சி வரை என்ற தலைப்பில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி கருத்துரையாற்றி னார். மூன்றாம் நாள் வியாழக்கிழமை 1917 ரஷ்ய புரட்சி முதல் 1951 காலனி நாடுகள் விடு தலை வரை என்ற தலைப்பில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி உரை யாற்றினார். நான்காம் நாள் வெள்ளிக்கி ழமை, 1951 காலனி நாடுகள் விடுதலை முதல் 1991 தாராளமாக கொள்கை தொடக்கம் வரை என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் அ.நிசார் அகமது பேசினார். நிறைவு நாளான சனிக்கிழமை, 1991 தாராள மயக் கொள்கை தொடக்கம் முதல் 2024 தற்கா லம் வரை என்ற தலைப்பில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன் உரையாற் றினார். தற்கால சமூக, அரசியல் நிகழ்ச்சி போக்கு களை மார்க்சிய அடிப்படையில் புரிந்து கொள்வதற்கு இந்த தொடர் வகுப்பு ஒரு புரி தலை ஏற்படுத்துவதாக இருக்கிறது. வர லாற்று ரீதியாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டது தொடங்கி, பாரிஸ் தொழி லாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்றி 72 நாட் கள் மிகச் சிறப்பாக சோசலிச சமூகத்தை உரு வாக்க முயன்றதையும், அதை பிரான்ஸ் முத லாளிகள் வர்க்கம் ரத்த வெள்ளத்தில் மூழ்க டித்ததையும் வகுப்பாசிரியர்கள் குறிப்பிட்ட னர். பாரிஸ் கம்யூன் புரட்சியின் தோல்வியில் அனுபவம் பெற்று, தொழிலாளி வர்க்கம், விவசாயிகள் வர்க்கம் ஒன்று சேர்ந்து ரஷ்யா வில் ஜார் மன்னன் ஆட்சியை வீழ்த்தி உலகில் முதன்முறையாக சோசலிச ஆட்சியை வெற்றிகரமாக நிறுவியது. இது வறுமை, சுரண்டல், ஒடுக்குமுறை, ஏற்றத்தாழ்வு இல் லாத ஒரு சமத்துவ சமுதாயம் இந்த பூமியில் சாத்தியம் என்பதை நிரூபித்து காட்டியது. அதேசமயம் புதிதாகப் பிறந்த சோசலிச சோவியத் யூனியனை அழிப்பதற்காக பாசிச சக்திகள் இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட தையும், அதை சோவியத் யூனியன் அரும்பெ ரும் தியாகம் செய்து வெற்றிகரமாக தோற்க டித்தது என்றும் இந்த வகுப்பில் தெரிவித்த னர். பாசிச சக்திகள் வீழ்த்தப்பட்டதுடன், ஏகா திபத்திய நாடுகளால் அடிமைப்பட்டு இருந்த காலனி நாடுகள் விடுதலை பெற்றன. குறிப் பாக இந்தியா, சீனா உட்பட ஆசிய, ஆப்பி ரிக்க நாடுகள் விடுதலை பெற்றன.
சோசலிச நாடுகளின் வெற்றியும், காலனி நாடுகள் விடுதலையும், ஏகாதிபத்திய முதலா ளித்துவ நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்ப டுத்தின. எனவே அவர்கள், இரண்டாம் உல கப்போருக்கு பின்பு, மக்கள் நல அரசுகள் என்ற கருத்தை பின்பற்றி பல்வேறு சமூக நலத் திட்டங்களை உழைக்கும் மக்களுக்கு அமல்படுத்தினர். அதன் ஒரு பகுதியாகவே, இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. வங்கிகள் தேசிய மய மாக்கப்பட்டன. குறிப்பிட்ட சமூக நலத்திட்டங் கள் அமலாக்கப்பட்டன. எனினும், முதலா ளித்துவ நாடுகள் 1970 - 80 காலகட்டத்தில் நெருக்கடியில் சிக்கிய நிலையில், மக்கள் நல அரசுகள் என்ற நிலைபாட்டில் இருந்து பின் வாங்கத் தொடங்கின. சோவியத் யூனியன் உள்ளிட்ட சோசலிச நாடுகள் தோல்விய டைந்து, சோசலிசம் பின்னடைவை சந்தித்த தால், ஏகாதிபத்திய நாடுகள் ஊக்கமடைந்து, 1991 முதல் புதிய வேகத்தில் தாராளமயக் கொள்கையை அமலாக்கினர். இதனால் மக்கள் நல அரசுகள் என்ற கருத்தாக்கம் கைவிடப்பட்டு, கல்வி, சுகாதாரம் ஆகியவை அரசின் பொறுப்பு என்பதிலிருந்து வியாபா ரமாக மாற்றப்பட்டது. வேலைவாய்ப்பு, தொழிலாளர் சட்ட உரிமைகள் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. வேலையில்லா கால நிவாரணம், ஓய்வு கால பயன்கள் ஆகிய வையும் வெட்டி சுருக்கப்பட்டன. முதலாளித் துவத்தின் கடுமையான, ஈவுயிரக்கமில்லாத சுரண்டல் தீவிரமடைந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும் குறிப்பாக ஈராக், லிபியா, ஆப் கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும், பாலஸ் தீனம், சிரியா போன்ற நாடுகளிலும், உக்ரைன் நாட்டை மையமாகக் கொண்டு ரஷ்யாவுடன் நேட்டோ நாடுகள் யுத்தம் நடத்துகின்றன. தற்போது வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஏழை எளிய உழைப்பாளி மக்கள் மட்டுமின்றி நடுத்தர மக் கள் வாழ்வாதாரத்தின் மீதான கடுமையான தாக்குதல், இடைவிடாத போர்கள் என முத லாளித்துவ அமைப்பினால் தற்போதைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடிய வில்லை. இந்த நிலையில், முதலாளித்துவ நெருக் கடியை திசை திருப்புவதற்காக உலகெங்கி லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நிற வெறி, மதம், இனம், மொழி, பிராந்தியம் ஆகி யவற்றை அடிப்படையாகக் கொண்டு குறு கிய வெறி உணர்வை தூண்டிவிட்டு வலது சாரி சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வருகின் றன. இதற்கு எதிராக உலகின் வளர்ந்த நாடு களிலும், வளரும் நாடுகளிலும் உழைக்கும் மக்கள் போராட்டங்கள் இடதுசாரிகள் தலை மையில் அதிகரித்து வருகின்றன. தற்போதைய தாராளமய காலகட்டத்தில் வலதுசாரி சக்திகளும், கார்ப்பரேட் பெரு முதலாளிகளும் வெளிப்படையாக கைகோர்த்து, ஜனநாயகத்திற்கும், உழைக் கும் மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவாகி வருகின் றனர். இதற்கு எதிராக கார்ல் மார்க்ஸ் சுட்டிக் காட்டியபடி தொழிலாளி வர்க்கமும், விவ சாய வர்க்கமும் ஒன்று சேர்ந்து அனைத்து பகுதி மக்களையும் அணிதிரட்டி, வலதுசா ரிகளுக்கு எதிராக போராட வேண்டும். இதன் மூலம் தான் உலகத்தை பாதுகாத்து உழைக் கும் மக்களுக்கு சமத்துவமான எதிர்கா லத்தை படைக்க முடியும், என்று இந்த தொடர் வகுப்பில் சுட்டிக் காட்டப்பட்டது.