திருப்பூர், பிப்.24- திருப்பூர் மாநகராட்சி சத்துணவு முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்குத் தெரிவிக்கப்பட் டுள்ளது. 15 நாட்களில் அறிக்கை கிடைத்தவுடன் மாவட்ட ஆட்சிய ரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ள னர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் வியானன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்புப் போராட் டம் நடத்தப்பட்டது. குறிப்பாக உத வியாளர்களுக்கு சமையலராக பதிவு உயர்வு வழங்க வேண்டும். பொதுப்பணி மாறுதல் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். திருப்பூர் மாநகராட்சி சத்துணவு பிரிவு முறை கேடுகளைக் களைந்திட வேண்டும். அவிநாசி ஒன்றிய பிரச்சனையில் நீதி வழங்க தாமதிக்கக் கூடாது. ஜி.பி.எப்., தொகையில் இருந்து கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டங்களில் பிடித்தம் செய் யப்பட்ட ஊதியத் தொகையைத் திரும்ப வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் முடிவில் சத் துணவு ஊழியர் சங்கப் பிரதிநிதி களுடன் மாவட்ட நிர்வாகத் தரப்பில் கோரிக்கை குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதில் அரசா ணைப்படி காலி பணியிடம் நிரப்பப் படும், பொது பணி மாறுதல் குறித்து ஆணையர்களிடம் மின்னஞ்சல் மூலம் கோரப்பட்டுள்ளது, சத்து ணவு முறைகேடு தொடர்பாக விசா ரித்து நடவடிக்கை எடுப்பது, பிடித் தம் செய்த ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறை வேற்ற உறுதியளிக்கப்பட்டது. இப்பேச்சுவார்த்தையில் திருப் பூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மற்றும் சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் கு.சக்தி, மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி, மாவட்டச் செயலாளர் எஸ்.முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் பி. பாக்கியம், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராணி, மாவட் டப் பொருளாளர் முருகசாமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். முன் னதாக காத்திருப்புப் போராட்டத் தில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியம் வாழ்த்திப் பேசினார். பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் நிறை வேற்றப்பட்ட நிலையில் காத்திருப் புப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட் டது.