அவிநாசி,டிச.27- திருமுருகன்பூண்டி நகராட்சி, நெசவாளர் காலனி பகுதியில் தரமற்ற முறையில் சாக்கடை கால்வாய் அமைத் ததாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் 23 ஆவது வார்டுக்குட்பட்ட நெசவாளர் காலனி பகுதியில் ஒரு வார காலத்திற்கு முன்பு ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு வார காலத் திற்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய் சிதலமடைந்து உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருமுரு கன்பூண்டி நகர கிளை நிர்வாகிகள் தெரிவிக்கையில், ஒரு வார காலத்திற்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய் சிதலமடைந்து உள்ளது, திருமுருகன்பூண்டி நக ராட்சி நிர்வாகத்தில் ஊழல் புரையோடிக் கிடப்பதைக் காட்டுகி றது. இது போன்ற நிர்வாக சீர்கேட்டில் செயல்படும் திருமுரு கன்பூண்டி நகராட்சியினை கண்டிக்கிறோம். தரமற்ற முறை யில் சாக்கடை கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் சட்டரீதியான நட வடிக்கைகள் மேற்கொண்டு, மீண்டும் தரமான முறையில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என கூறினர்.