நாமக்கல், மே 13- திருச்சங்கோடு அரசு மருத்துவ மனையில் முதல்முறையாக மூட்டு அறுவை சிகிச்சையை மேற் கொண்டு அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். திருச்செங்கோடு அரசு மருத்து வமனைக்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கானோர் வெளி நோயாளி களாக வந்து செல்கின்றனர். உள் நோயாளிகளாகவும் ஏராளமா னோர் சிகிச்சை பெற்று வருகின் றனர். இம்மருத்துவமனையில், எலும்பு முறிவு பிரிவு இல்லாமல் இருந்தது. திருச்செங்கோடு நகரம் லாரி ரிக் தொழில் நகரமாக விளங் குவதால் விபத்துகள் அதிகம் ஏற் படும். இதில், எலும்பு முறிவு ஏற் படும் போது சேலம், ஈரோடு, கோவைக்கு கொண்டு செல்லப் பட்டு சிகிச்சை மேற்க்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் திருச் செங்கோடு அரசு மருத்துவ மனையில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு அமைக்க வேண்டும் என் கிற கோரிக்கை எழுந்து வந்தது. இதனையடுத்து, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு எலும்பு முறிவு பிரிவு துவங்கப்பட்டது. இந்தப் பிரிவிற்கு மருத்துவர் சந்தோஷ் குமார், மருத்துவர் கோகுல் ஆகிய இரண்டு மருத்துவர்கள் நியமிக் கப்பட்டு
, பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கி வந்தனர். இந்நிலையில், கச்சுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜு என்ப வரும், திருச்செங்கோடு ராயர் பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக, திருச் செங்கோடு அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். தனி யார் மருத்துவமனைகளில் மூன்று லட்ச ரூபாய் செலவாகும் என்ற நிலையில், முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலமாக திருச்செங்க்கோடு அரசு மருத்துவ மனையில் இருவருக்கும் முதல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை செய்தனர். நடக்க முடியாமல் இருந் தவர்கள் நலம் பெற்று வீட்டிற்க செல்லும் நிலையில் உள்ளனர். இது குறித்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மோகன பானு கூறும் போது, நடக்க முடியாமல் அவதிப் பட்டு வந்த இருவரை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து அவர்கள் குணமடைய செய்துள்ளோம். இது வரை திருச்செங்கோட்டில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு இல்லாமல் இருந்தது. தற்போது அந்த பிரிவு ஏற்படுத் தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இதனை பொதுமக்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். கிராம பகுதி யான திருச்செங்கோட்டில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்களை மருத்துவ அலுவலர் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசு மருத்து வர்கள் வெகுவாக பாராட்டினர்.