districts

img

திப்பு சுல்தான் பிறந்த நாள் கருத்தரங்கம்

ஈரோடு, டிச. 4- சுதந்திர போராளி மாவீரன் திப்புசுல்தான் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது.  பிரிட்டீசாரின் படைகளை நடுநடுங்க வைத்த, இணை யற்ற விடுதலை போராட்ட மாவீரன் திப்புசுல்தான் பிறந்த  நாள் விழா கருத்தரங்கம் சத்தியமங்கலத்தில் நடை பெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.ஜஹாங்கீர் நிகழ்விற்கு  தலைமை ஏற்றார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஹாத்திம் ்தாய் வரவேற்றார். மாவட்டத் தலைவர் கே.எஸ்.இஸா ரத்தலி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநிலக்குழு உறுப் பினர் எஸ்.ஜமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் களப்பிரன் மற்றும் சிறுபான்மை  மக்கள் நலக்குழுவின் மாநில உதவித்தலைவர் ப.மாரி முத்து ஆகியோர் கருத்துரையாற்றினர்.  நிகழ்ச்சியில் கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி யில் வென்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப் பட்டன. போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ,  மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. நிறைவாக மாவட்ட துணைத்தலைவர் டி.சுப்பிரமணி நன்றி கூறினார்.