districts

img

மூன்று தொழிலாளர்கள் பணி நீக்கம் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

அவிநாசி, ஆக.10- திருமுருகன்பூண்டி நகராட்சியில் மூன்று  தொழிலாளிகள் பணி நீக்கத்தை கண்டித்து  வியாழனன்று சிஐடியு சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் வேலை புறக்க ணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் அவுட்சோர்சிங் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து பல்வேறு கட்டமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த  நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சியில், 15 நாட்களுக்கு முன்பாக எந்தவித முன்னறி விப்பும் இன்றி திடீரென்று மூன்று தொழி லாளிகளை ஒப்பந்ததாரர் பணி நீக்கம் செய் துள்ளார். இதுகுறித்து சிஐடியு சங்கம்  சார்பில், திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையருக்கும், நகர மன்றத் தலைவ ருக்கும், மூன்று தொழிலாளிகள் 10 ஆண்டு களுக்கு மேலாக பணி செய்து வருகின்றனர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம்  செய்துள்ளீர்கள், இவர்களை மீண்டும் பணியில் சேர்த்த வேண்டும் என்று கடிதம்  வழங்கப்பட்டுள்ளது. இதில் நகர மன்ற ஆணையர் இல்லாத காரணமாக நகர மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகர மன்றத்  தலைவர் ஒப்பந்ததாரரிடம் பணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இருப் பினும் ஒப்பந்ததாரர் மறுப்பு தெரிவித்துள் ளார். இதன் காரணமாக சிஐடியு ஊரக வளர்ச்சி  உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் மூன்று தொழிலாளிக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து காலை 7 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த திருமுருகன்பூண்டி காவல்துறை அதிகாரி ஒப்பந்ததாரரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார், அதே போல சிஐடியு நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.  இறுதியாக சனிக்கிழமை முதல் மூன்று தொழிலாளிகளை பணியில் சேர்த்துக் கொள்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு சென்றனர். மேலும் பணிநீக்கம் செய் யப்பட்ட தொழிலாளிக்கு மாற்றாக வேறு  தொழிலாளி பணியில் சேர்த்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.