கோவை, ஜன.22- தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழக அரசின் 2023 ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதினை பெற்ற எழுத்தாளர் இரணியனை பி.ஆர்.நட ராஜன் எம்பி., தமுஎகசவினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அன்மையில், சென்னை, வள்ளு வர் கோட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமி ழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழறிஞர்களுக்கு தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது களை வழங்கி கௌரவித்தார். தமிழறிஞர்களை கௌரவப்படுத் தும் வகையில், இந்த விருது அளிக் கப்பட்டது. அந்த வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விரு தினை கோவை நீலாம்பூரை சேர்ந்த இரணியன் என்கிற நா.கு.பொன்னு சாமிக்கு தமிழக முதல்வர் விருது வழங்கி கௌரவித்திருந்தார். எழுத்தாளர் இரணியன், சோபா நரசிம்ம நாயுடு உயர்நிலைப்பள்ளி யில் தமிழாசிரியராக இருந்து தலைமை ஆசிரியராக உயர்வு பெற்ற வர். இடதுசாரிகளுடனான நெருக்க மும், தமிழ் மொழி மீது அளவற்ற பாச மும் கொண்டவரான இரணியனுக்கு உரிய நேரத்தில் திருவள்ளுவர் விரு தினை தமிழக அரசு வழங்கி கௌர வித்துள்ளது. இவ்விருதினை பெற்ற எழுத்தா ளர் இரணியனை மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தி.மணி, செய லாளர் அ.கரீம் மற்றும் நிர்வாகிக ளும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில துணைத்தலைவர் யு.கே. சிவஞானம் ஆகியோர் கோவை வரத ராஜபுரத்தையடுத்த, நீலாம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து கௌரவித்து, வாழ்த்துக்களை தெரி வித்தனர்.