districts

திருப்பூரில் தீக்கதிர் நடத்தும் மாரத்தான் ஓட்டம்

திருப்பூர், செப்.28 - அறிவியலாய் சிந்திப்போம், பின்னலாய் இணைவோம் என்ற  முழக்கத்துடன், அறிவியல் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில், தீக்கதிர் நாளிதழ் சார்பில் திருப் பூரில் ஞாயிறன்று மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது. ஊடக உலகில் உண்மையின் பேரொளியாக செயல்படும் தீக்கதிர் நாளிதழ் திருப்பூர் நகரில்  முன்னணி நாளிதழ்களில் ஒன் றாக விற்பனையாகி வருகிறது. இந்த நாளிதழ் சார்பில் அறிவியல்  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் அறிவியலாய் சிந்திப்போம், பின்னலாய் இணைவோம் என்ற முழக்கத்துடன் மாரத்தான் போட்டி  நடத்தப்படுகிறது. அக்டோபர் 1ஆம் தேதி ஞாயி றன்று காலை 6 மணிக்கு திருப்பூர் காலேஜ் ரோடு ஹவுஸிங் யூனிட் அருகில் இந்த மாரத்தான் ஓட்டம்  தொடங்குகிறது. ஹவுசிங் யூனிட் டில் இருந்து, சிக்கண்ணா கல்லூரி,  கொங்கணகிரி, அணைப்பா ளையம் என வஞ்சிபாளையம் சாலையில் கனியாம் பூண்டி பிரிவு  வரை சென்று மீண்டும் அதே வழித் தடத்தில் ஹவுசிங் யூனிட்டை வந்தடைகின்றனர். 8 கிலோ மீட்டர்  தூரம் இந்த மாராத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. பரிசுத்தொகை மற்றும் பதக்கம் இந்த மாரத்தான் ஓட்டத்தில் ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். ஆண்கள், பெண்கள் இரு பால ருக்கும் தனித்தனியாக பரிசுகள் உண்டு. முதல் பரிசு ரூ.10 ஆயிரம்,  இரண்டாம் பரிசு ரூ.5 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.3 ஆயிரம்  வழங் கப்படும். இத்துடன் 5 ஆண்கள் மற்றும் 5 பெண்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.1000 வீதம் வழங்கப் படும். இந்த மாரத்தான் ஓட்டத்தில் பங் கேற்போர் ரூ.100 செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து  பங்கேற்போருக்கு டி-ஷர்ட் வழங் கப்படும். பங்கேற்ற அனைவருக் கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். அமைச்சர் துவக்கி வைக்கிறார்   முன்னதாக, மாநிலத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை காலை 7.30 மணி அளவில் தீக்கதிர் திருப்பூர் அலுவ லகம் செயல்படும் தியாகி பழனி சாமி நிலையம் முன்பாக மாரத் தான் ஓட்டத்திற்கு பதிவு செய்திருக் கும் பத்து நபர்களுக்கு டீ சர்ட் வழங்கி அடையாளபூர்வமாக மாரத்தான் நிகழ்வை தொடங்கி வைக்கிறார். ஞாயிறன்று இந்த மாரத்தான் ஓட்டம் தொடக்க மற்றும் பரி சளிப்பு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வராஜ்,

மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார், துணை மேயர் ஆர்.பால சுப்ரமணியம், தீக்கதிர் சிறப்பா சிரியர் மதுக்கூர் ராமலிங்கம், தீக்கதிர் முதன்மை பொது மேலா ளர் என்.பாண்டி, தீக்கதிர் கோவை  பதிப்பு பொறுப்பாளர் கே.காம ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ. மாணிக்கம், தீக்கதிர் எண்ம பதிப்பு பொறுப்பாசிரியர் எம்.கண்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாரத்தான் ஓட்டம் நடை பெறும் பகுதியில் நிகழ்வை ஒழுங்கு செய்யவும், இதர உதவி களுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுவர். வழியில் முக்கிய இடங் களில் குடிநீர் வசதியும், மருத்துவர்  உள்ளிட்ட ஆம்புலன்ஸ் வாகனங் களும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளன. ஆர்வமுள்ளோர் பங்கேற்கலாம் இந்த மாரத்தான் ஓட்டத்தில் பதிவு செய்தோர் தவிர, அறிவியல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் ஆர்வமுள்ளவர்களும் பங்கேற்கலாம் என்று தீக்கதிர் கோவை பதிப்பு பொறுப்பாளர் கே.காமராஜ் தெரிவித்தார்.  இந்த மாரத்தான் ஓட்டம் ஒருங்கி ணைப்பாளர்கள் ச. நந்தகோபால், செ.மணிகண்டன் ஆகியோர் தலை மையிலான குழுவினர் மாரத்தான் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கவ னித்து வருகின்றனர்.