districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது

திருப்பூர், டிச. 28 - பெருமாநல்லூர் தாய் - சேய் மருத்துவ மனையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்க வேண்டிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படாமல் கர்ப்பிணி பெண்கள் அலைக்கழிக்கப்படுவதாக, டிசம்பர் 24ஆம் தேதி தீக்கதிரில் செய்தி  வெளியிடப்பட்டது. இதன் எதிரொலி யாகப் புதன்கிழமை கர்ப்பிணிப் பெண்க ளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப் பட்டுள்ளது. இது குறித்து வட்டார மருத்துவ அலுவ லர் டாக்டர் நித்யா கூறியதாவது: ஊட் டச்சத்து பெட்டகம் கையிருப்பு இல்லாத தால் தான் வழங்கப்படாமல் இருந்தது.  கடந்த வியாழக்கிழமை ஊட்டச்சத்து பெட் டகம் வந்த நிலையில் செவ்வாய்க்கிழ மைக்குள் கர்ப்பிணிப் பெண்களுக்கு  வழங்கப்படும் என்று தெரிவித்திருந் தோம். அதன் அடிப்படையில், பெருமா நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப் பிணி பெண்கள் அனைவருக்கும் ஊட்டச் சத்து பெட்டகம் விநியோகம் செய்யப்பட் டது. மேலும் ஜிசிடி பரிசோதனை பற்றிய தக வல்கள் முறையாக கர்ப்பிணிப் பெண்க ளுக்கு செல்வதற்காக புதிய வாட்ஸ் ஆப்  குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன, என் றார்.