திருப்பூர், அக.24- கிராம பகுதிகளில் இளைஞர்க ளின் விளையாட்டு திறனை மேம்ப டுத்த வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் ஊராட்சி அலுவல கங்களில் கிடக்கின்றன. அதை உட னடியாக விநியோக்கிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பல்ல டம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத் தில் கோரிக்கை வைக்கப்பட்டுள் ளது. பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஒன்றிய துணைத்தலைவர் பாலசுப் பிரமணியம் (திமுக) கூறியதாவது, முன்னாள் முதல்வர் கலைஞர் கரு ணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கிராமப்புற இளைஞர்க ளின் விளையாட்டுத் திறனை மேம்ப டுத்தும் நோக்கத்தில், கிராம ஊராட்சி களுக்கு விளையாட்டு உபகரணங் கள் அடங்கிய தொகுப்புகள் வழங் கப்பட்டன. ஆனால், பல ஊராட்சிக ளில் விளையாட்டு உபகரணங்கள் இன்னும் விநியோகிக்கப்படாமல் ஊராட்சி அலுவலகத்திலேயே கிடக் கின்றன. விளையாட்டு உபகரணங் களை உடனடியாக வழங்க கிராம ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரைப்புதூர் ஊராட்சி பாரியூர் அம்மன் நகர் முதல் அல்லாளபுரம் வரையிலான ஆக்கி ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லாளபுரம் பகு தியில் அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா இடத்தின் மேல் உயர்மின் கம்பி செல்வதால், ஏதேனும் அசம்பா விதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், 3 வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லா மல் இருளில் வசிக்கின்றனர். எனவே உடனடியாக உயர்மின் கம்பியை மாற்று வழியில் எடுத்து செல்லவும், மின் இணைப்பு இல்லாத வீடுக ளுக்கு மின் இணைப்பு வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆர்.ஆர்.ரவி (மதிமுக) பேசுகை யில், கரைப்புதூரில் உள்ள அரசு நடு நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரி யர், ஆசிரியர்கள் பணியிடங்கள் கடந்த 4 மாதங்களாக காலியாக உள் ளன. இதனால், மாணவ, மாணவிக ளின் கல்வி பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக காலிப் பணியி டங்களை நிரப்ப வேண்டும். அருள் புரம் - உப்பிலிபாளையம் சாலையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மங்கையர்க்கரசி (அதிமுக) கூறு கையில், வீட்டுமனை வரன்முறைப டுத்துவதில், தற்போது புதிய விதிமு றைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களுக்கு இது குறித்த விரிவான விளக்கம் அளித்து தெரியப்படுத்த வேண்டும். மேலும் மகளிர் உரிமைத் தொகை விடுப்பட் டுள்ளவர்களுக்கு வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து, இச்சிப்பட்டி பகுதியில் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும், ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற கோடங்கிபா ளையம் மற்றும் புளியம்பட்டி ஊராட்சி நிர்வாகங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது உட்பட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஒன்றிய ஆணையர் கனக ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் கலந்துகொண்டனர்.