districts

மயானத்திற்கு செல்ல சாலை வசதியில்லை: போராட்டம் நடத்த முடிவு

உதகை, ஜூன் 25- உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட அழகர் மலை மயானத்திற்கு செல்ல சாலை வசதியில்லாதால், இறந்த வர்களை கொண்டு செல்ல அப்பகுதி  பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள் ளாகி வரும் நிலையில், பெரும் போராட்டத்தில் ஈடுபட அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்துள்ள னர். நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த உல்லத்தி ஊராட்சிக்குட்பட் டது அழகர் மலை கிராமம். இக்கிரா மத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகின்றன. அழ கர் மலை கிராமத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மயா னம் உள்ளது. மயானத்திற்கு செல்வ தற்கு சரியான சாலை வசதி இல்லா மல் உள்ளது. அதாவது சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு ஒத்தையடி பாதை யாக உள்ளது. இதனால் கிராமத்தில் ஏதேனும் இறப்பு சம்பவங்கள் நிகழ்ந் தால் சடலத்தை ஒத்தையடி பாதை யில் சுமந்து செல்லும் அவல நிலை  தொடர்ந்து வருகிறது.

ஒத்தையடி பாதையில் சடலத்தை தூக்கிக் கொண்டு 4 பேர் நடந்து செல்ல மிக வும் சிரமமாக உள்ளது. ஒத்தையடி பாதையில் செல்லும்போது தவறி விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த ராஜூ என்பவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக இறந்து விட்டார். இதையடுத்து பொதுமக்கள் ஒத்தை யடி பாதை வழியாக அவரது உடலை தட்டு தடுமாறி கொண்டு சென்றனர். இந்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரு கிறது. இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் கூறுகையில்,  அழ கர் மலை கிராமம் பார்ப்பதற்கு அழ காக இருக்கும். ஆனால், ஊரிலி ருந்து சுடுகாட்டுக்கு செல்வதற்கு கடந்த 10 ஆண்டுகளாக சாலை வசதி யின்றி, ஒத்தையடி பாதை வழியாக சென்று வருகிறோம். இதுகுறித்து உள் ளாட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இறப்பு சம்பவங்கள் நிக ழும்போது மட்டும் சாலை வசதி ஏற் படுத்தி தருவதாக கூறுகின்றனர். ஆனால் அதன்பின்னர் எந்தவித நடவ டிக்கையும் எடுப்பதில்லை. மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாமல் மிகவும் அவதிப் பட்டு வருகிறோம். இந்தப் பிரச்ச னைக்கு விரைவில் தீர்வு காணாமல் விட்டால் கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள் ளோம், என்றனர்.