districts

சுகாதார நிலையத்தில் குளுகோஸ் இல்லை திருப்பி அனுப்பப்படும் கர்ப்பிணி பெண்கள்

திருப்பூர், ஜூன் 23 – திருப்பூரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையத்தில் ரத்த பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்க வேண்டிய குளுகோஸ் இல்லை என மூன்று  வாரங்களாக திருப்பி அனுப்பப்படுகின்ற னர். திருப்பூர் கோயில்வழியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வரு கிறது. இங்கு கர்ப்பிணிகளுக்கு ஜிடிடி எனப் படும் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனை வியாழன், வெள்ளி, சனிக்கிழ மைகளில் செய்யப்படுகிறது. இந்த சோத னைக்கு வரக்கூடிய கர்ப்பிணிகளுக்கு குளு கோஸ் சாப்பிடுவதற்கு கொடுக்கப்படும். அதை சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு கணக்கி டப்படும். இந்த சோதனையை செய்வதன் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை  நோய் உள்ளதா என்பதை துல்லியமாக கண் டறிவதுடன், அதற்குரிய மருந்துகளும் வழங்கப்படும். இந்த சோதனையை மேற் கொண்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் கருக் கலைப்பு ஆவதை தடுக்க முடியும், வயிற் றில் வளரும் சிசுவுக்கு ஏற்படக்கூடிய இதர  பாதிப்புகளையும் முன்கூட்டியே தடுக்க முடி யும் என மருத்துவ வட்டாரத்தினர் கூறுகின்ற னர்.

இந்நிலையில் கோயில்வழியைச் சேர்ந்த நித்யா (வயது 22) என்ற கர்ப்பிணி  குளுகோஸ் ரத்த பரிசோதனை செய்வதற் காக கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அங்குள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யத்துக்குப் போயிருக்கிறார். அப்போது அங்கு குளுகோஸ் இருப்பு இல்லை, புதி தாக வந்தால்தான் கொடுக்க முடியும் என்று  கூறி ரத்த பரிசோதனை செய்யாமல் திருப்பி  அனுப்பி விட்டனர். அதன் பிறகு ஒரு வார  காலம் கழித்து மீண்டும் அங்கு போயிருக்கி றார். அப்போதும் குளுகோஸ் வரவில்லை  என்று அங்கிருந்த செவிலியர்கள் தெரிவித் துள்ளனர். எப்போது குளுகோஸ் வரும், எப் போது ரத்த பரிசோதனை செய்ய வர வேண் டும் என நித்யா கேட்டபோது தெளிவான பதில் அளிக்கப்படவில்லை.

மூன்றாவது முறையாக இந்த வாரம்  வியாழக்கிழமை கோயில்வழி ஆரம்ப சுகா தார நிலையத்துக்கு நித்யா அவரது கணவ ருடன் சென்றிருக்கிறார். இப்போதும் குளு கோஸ் வரவில்லை, மேலிருந்து எப்போது அனுப்புவார்கள் எனத் தெரியவில்லை, குளுகோஸ் வந்தால்தான் கொடுக்க முடி யும், ரத்த பரிசோதனை செய்ய முடியும் என்று பதில் கூறி இருக்கின்றனர்.  இதனால், தற்போது நான்கு மாதம் முடிந்து ஐந்தாவது மாத கருவைச் சுமந்து  வரும் நித்யாவுக்கு எப்போது ரத்த சர்க்கரை  அளவை கணிக்கும் குளுகோஸ் ரத்தப் பரி சோதனை செய்வார்கள் எனத் தெரிய வில்லை என்று அவரது கணவர் விஜய்பி ரசாத் வேதனையுடன் தெரிவித்தார். இது போல் இன்னும் எத்தனை கர்ப்பிணி கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று தெரிய வில்லை. மருத்துவத்துறை பணியாளர் களிடம் கேட்டபோது, குளுக்கோஸ் மட்டு மல்ல, நோயாளிகளுக்கு அவசியம் தேவைப்படக்கூடிய ஏராளமான மருந்துகள்  பற்றாக்குறையாக உள்ளது என்று கூறி னர். இப்பிரச்சனை குறித்து சுகாதாரப்பணி கள் துணை இயக்குநர் ஜெகதீஸ்குமாரை தொடர்பு கொள்ள பல முறை முயன்றும் அவர் அலைபேசியை எடுக்கவில்லை. எனவே அவரது பதிலைப் பெற முடிய வில்லை.