உதகை, ஜூலை 30- வளர்ச்சிப் பணிகளில் உதகை நகராட்சி ஆணையர் பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டி, திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை நக ராட்சியில் செவ்வாயன்று சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு, நகராட்சி ஆணையர் ஏகராஜ் தலைமை வகித்தார். நகராட்சித் தலைவர் வாணீஸ்வரி, துணைத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டம் துவங்கியதும், திமுக கவுன்சிலர் கள், நாகமணி, செல்வராஜ், கீதா, அனிதா லட்சுமி, பிளோமின புஷ்ப ராஜ், பிரியாவினோதனி, மேரி பிளோ, மின மார்ட்டின், வனிதா, விசாலாட்சி ஆகிய 9 திமுக கவுன்சி லர்கள் ஒன்றாக இருக்கையிலி ருந்து எழுந்தனர். பின்னர், ஒருசேர எழுந்து டெண்டர் விடுவதில் முறை கேடு, குறிப்பிட்ட வார்டுகளை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வ தில் பாரபட்சம் காட்டுவதாக முழக் கங்களை எழுப்பினர். இதனைய டுத்து, அவையில் காரசார விவாதம் ஏற்பட்டது. பின்னர், அனைத்து திமுக கவுன்சிலர்களும் ஆணை யரை கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு மன்ற கூட்டத்திலி ருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து திமுக கவுன்சி லர்கள் கூறுகையில், சுற்றுலா நகரத் தில் கழிப்பறை வசதி இல்லை, தெரு விளக்குகள் இல்லாமல் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள் ளது. தெரு நாய் தொல்லையால் பொதுமக்கள் அவதி அடைந்து வரு கின்றனர். மாதந்தோறும் நடக்கும் சுகாதாரப் பணியும் நடப்பதில்லை. வார்டுகளில் சுடுகாட்டிற்கு நடை பாதை வசதியும் இல்லை. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு இல்லை. அடிப் படை தேவைகள் நிறைவேற்றாத தால் வார்டு பக்கம் மன்ற உறுப்பி னர்கள் தலைக் காட்ட முடிய வில்லை என வேதனை தெரிவித்த னர்.