கோவை, ஜூன் 9- பஞ்சப்படி உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என போக்கு வரத்து துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர் தெரிவித்துள்ளார். கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு போக்கு வரத்து கழக கோவை கிளை பணிமனை யில், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் மின் சார துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர் கோவை போக்கு வரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்றோருக்கு பணபலன்களை வழங் கினர். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறு கையில், கோவையில் 518 பேருக்கு 145.58 கோடி பணபலன்கள் வழங்கப் பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர் மண்டலங்களில் நடத்துநர், ஓட்டுநர் களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறைகள் துவக்கி வைக்கப்பட் டுள்ளது. மேலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட பேருந்துக்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு ஓட்டுநர், நடத்துநர் கூட பணிக்கு அமர்த்தப்படவில்லை. பிறகு கொரோனா காரணமாக புதிய நடத்துநர் மற்றும் ஓட்டுநரை பணிக்கு எடுக்க இய லாத சூழல் இருந்தது. தற்போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை பணிக்கு எடுப்ப தற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கி உள்ளார்.
அதன்படி, முதல் கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மற்ற அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் ஆட்கள் தேர்வு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கிறது. அரசு பேருந்துகளை பராமரிப் பதற்கு வழக்கமாக ஒதுக்கப்படுகின்ற நிதி தான் ஒதுக்கப்படுகிறது. இதில் எந்த ஒரு குறையும் இல்லை. கூடுதலாக நிதி ஒதுக்க தேவை இருக்கும் பட்சத்தில் முதலமைச்சரிடம் பேசி செயல்படுத்தப் படும். பஞ்சப்படி உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இக் கோரிக்கையை முதலமைச்சரின் கவ னத்திற்கு கொண்டு செல்லப்படும். 2000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு மாநில அரசின் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான ஒப்பந்தங்களும் துவங்கப்பட்டுள்ளன. மேலும் கேஎம் டபிள்யூ வங்கியின் நிதி உதவியுடன் 2400 பேருந்துகள் வாங்குவதற்கு பணி கள் துவங்கப்பட்டுள்ளது. இந்த பணி கள் ஆறு மாதத்திற்குள் புதிய பேருந்து கள் நடைமுறைக்கு விடப்படும், என் றார். இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநக ராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல மேலான் இயக்குநர் பா.திருவலம் பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.