districts

img

மயான இடம் தனிநபர் ஆக்கிரமிப்பு

பொள்ளாச்சி, அக்.5- பொள்ளாச்சி நல்லூத்துக்குளி அருகே தலித்  மக்களின் மயான பயன் பாட்டிற்காக  வருவாய்த்துறை ஒதுக்கப் பட்ட இடத்தை தனிநபர் ஆக்கிரமித் துள்ளார். மாவட்ட நிர்வாகம் உடனடி யாக தலையிட்டு அதனை மீட்க வேண்டும் என பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை  மனு அளித்தனர்.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி  வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்டது நல்லூத்துக்குளி. இக்கிரா மத்தில் அருந்ததிய மக்களுக்கு மயான  வசதி வேண்டும் என இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து  கோரிக்கை விடுத்து போராட்டம்  நடத்தி வந்தது. இதனையடுத்து வாலிபர் சங்கத்தின் தொடர் முன்னெ டுப்பால் வருவாய்த்துறையினர்  மயான பயன்பாட்டிற்காக ஒன்றரை  ஏக்கர் ஏக்கர் நிலம் ஒதுக்கினர்.  பொள்ளாச்சி வருவாய்த்துறை யினர் நில அளவை செய்து ஒதுக்கப் பட்டு கடந்த ஜூன் மாதத்தில் நில ஒதுக்கீடு ஆணை வழங்கினர். இந் நிலையில் மயானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் அப்பகுதியைச் சார்ந்த தென்னை வியாபாரி ஒருவர் தென்னை  மட்டைகளை உலர வைத்து வியா பாரம் செய்து வருகிறார்.  மயான நிலத்தை தனிநபர் ஆக்கிர மித்துள்ளதையறிந்து வாலிபர் சங்கத் தின் நல்லூத்துக்குளி கிளை சார்பில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதியன்று   நல்தூத்துக்குளி ஊராட்சியில் நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மான மாக முன்வைத்தனர். இதன் பின்னரும்  தொடர்ந்து தென்னை வியாபாரி ஆக்கி ரமிப்புகளை அகற்றவில்லை. இது குறித்து நல்லூத்துக்குளி  ஊராட்சி  நிர்வாகமும் சரிவர கண்டுகொள்ள வில்லை.

இதனை தொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், வாலிபர்  சங்கத்தின் பொள்ளாச்சி கிளை பொரு ளாளர் எஸ்.அழகர் மனு அளித்தார்.  இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை  எடுக்கப்படும் என பொள்ளாச்சி ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  வெங்கடேசன் தெரிவித்தார். இதனைத்  தொடர்ந்து அனைவரும் கலைந்து  சென்றனர். இதற்குப் பின்னரும் இன்றளவும் மயான பயங்னபாட்டிற் காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்கும் தென்னை மட்டை ஆக்கிர மிப்புகள் அகற்றப்படவில்லை. நல்லூத்துக்குளி  கிராமத்தில் உள்ள  தலித் மக்கள் சுடுகாட்டு பயன்பாட்டிற் காக வருவாய்த்துறை ஒதுக்கப்பட்ட இடத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு அகற்றப்படவில்லை என்றால், திங்களன்று பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தினர் சாலை  மறியல் போராட் டத்தில் ஈடுபடப் போவதாக பொள் ளாச்சி தாலுகா குழு அறிவித்து செய் துள்ளது. மேலும், மயான பயன்பாட்டுக் காக ஒதுக்கப்பட்ட இடத்தை சுற்றி வேலை கம்பிகள் அமைக்கப்பட வேண்டும். மின் வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற் படுத்தி தர  வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.