districts

img

விளையாட்டு மைதானம் அமைத்து தர வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் சாலையில் கபடி விளையாடி போராட்டம்

திருப்பூர், டிச.29- மாநில அளவிலான விளையாட்டு வீரர் கள் நிறைந்திருக்கும் ஆத்துப்பாளையம் பகு தியில் விளையாட்டு மைதானாம் அமைத்து தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் வெள்ளியன்று சாலையில் கபடி விளை யாடும் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். திருப்பூர் மாவட்டம், ஆத்துப்பாளையம் பகுதி மாநில, மாவட்ட அளவில் கபடி போட்டி களில் பங்கேற்ற வீரர்கள் நிறைந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள்  பல ஆண்டுகளாக விளையாட்டு மைதானம்  அமைத்து தர கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், மண்டல அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலையில் கபடி விளையாடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி வெள்ளியன்று வாலிபர் சங்கத்தின்  திருப்பூர் வடக்கு ஒன்றியம் ஆற்றுப்பாளை யம் கிளைச் செயலாளர் லோகேஸ் தலைமை யில் கபடி விளையாடும் போராட்டம் நடத்த  முற்பட்டனர். அப்போது, மாநகராட்சி மற்றும்  காவல் துறையினர் கோரிக்கை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்கா லிகமாக ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிகழ்வில், வாலிபர் சங்கத்தின் மாவட் டத் தலைவர் அருள், மாவட்டச் செயலா ளர் மணிகண்டன், முன்னாள் மாவட்டத் தலை வர் காளியப்பன், ஒன்றியத் தலைவர் ரேவந்த்,  ஒன்றியச் செயலாளர் சந்தோஷ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட விளையாட்டு வீரர்கள் 50 க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.