districts

img

சிஆர்பிஎப் போட்டி தேர்வை தமிழிலும் நடத்துக

கோவை, ஏப்.12- ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளை அந்தந்த மாநில மொழி களில் நடத்த வேண்டும்.சிஆர்பிஎப் போட்டி தேர்வை  தமிழ் மொழியிலும் நடத்த வலியுறுத்தி கோவையில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், சிஆர்பிஎப் தேர்வை தமிழ் மொழியிலும்   ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளை அந்தந்த, மாநில மொழியில் நடத்திடக் கோரி தமிழ் மொழியை தொடர்ந்து புறக் கணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து   முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர்  சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் அர்ஜுன், பொரு ளாளர் தினேஷ் ராஜா உள்ளிட்டோர் உரை யாற்றினர். இதில், திரளான இளைஞர்கள் பங்கேற்றனர்.