தொழிலாளர்களை எதிர்த்து மூன்று நாட்கள்கூட தாக்கு புடிக்க முடியவில்லை
ஈரோடு, நவ. 21- சுமைப்பணியாளர்களுக்கு எதிரான லாரி உரிமையா ளர்களின் போராட்டம் மூன்று நாட்கள் கூட தாக்கு புடிக்க முடி யாமல் முடிவிற்கு வந்தது. ஈரோடு மாவட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன், ஜவுளி அசோசி யேசன் மற்றும் விசைத்தறி உரிமையாளர் சங்கம் ஆகிய வற்றுடன் ஒப்பந்தத்தின்படி வேலை செய்து கூலி பெற்று வந்தனர். இந்நிலையில் கூலி உயர்வு ஒப்பந்தம் காலாவ தியாகி 3 ஆண்டுகளைக் கடந்துள்ளன. இதுகுறித்து தொழிற் சங்கங்களின் கோரிக்கைப்படி உரிமையாளர்கள் தரப்பு குறிப்பாக கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் கூலி பிரச்சனையை சுமூகமாகப் பேசி தீர்க்க முன்வரவில்லை. இதற்கிடையில் விஆர்எல் லாரி நிறுவனம் சுமைப்ப ணியாளர்கள் 7 பேரை பணியிடை நீக்கம் செய்தது. தொடர்ந்து வடமாநில தொழிலாளர்களை வைத்து வேலை செய்ய முயற்சித்தது. அப்போது, பேச்சுவார்த்தைக்கு சென்றபோது, எந்த நிறுவனத்திலும் உள்ளூர் தொழிலாளர்களை வேலை செய்ய விடமாட்டோம். வட மாநில தொழிலாளர்கள் தான் வேலை செய்வார்கள். உங்களால் முடிந்ததைப் பாருங்கள் என்று சவால் விடுத்தார். மேலும், தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்று திரண்டிருந்த தொழிலா ளர்கள் மீது மோதினார். இதனால் சிறிது கைகலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 18ஆம் தேதி முதல் கூட்ஸ் டிரான்ஸ் போர்ட் அசோசியேசன் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தது. போராட்டம் அறிவித்த நாளிலேயே உரிமையா ளர்களின் நிறுவனங்களில் ஆதரவு இல்லை என்பது தெரிந்தது. 19ஆம் தேதி பல நிறுவனங்கள் வேலை நிறுத்தத் திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மறுநாள் ஞாயிற்றுக்கி ழமை வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு குறைந்து வரும் நிலையினை கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியன் எனப் படும் சரக்கு போக்குவரத்து சங்கம் கூடி ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில், எங்களது முயற்சிக்கு ஆதரவு கொடுத்த சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். ஆனால் மருந்து, இரசாயனம், உணவு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் ( ஈரோடு மாநகர மக்களுக்கு தேவைப்படுவதால் அனைத்து லாரி அலு வலகங்கள் இயங்க தொடங்கும் என அறிவித்து பின்வாங்கி யது. இதனால் விஆர்எல் லாரி நிறுவனம் நீங்களாக அனைத்து நிறுவனங்களும் வழக்கம் போல் இயங்கியது. சுமைப்பணி தொழிலாளர்களை எதிர்த்து உரிமையாளர்கள் நடத்திய போ ராட்டம் மூன்று நாட்கள் கூட தாக்கு புடிக்க முடியாமல் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற வைத்தது, தொழிலார்க ளின் ஒற்றுமையை பறைசாட்டியுள்ளது.
காரமடை கொள்ளையில் திடீர் திருப்பம் 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை
கோவை, நவ.21- காரமடை பகுதியிலுள்ள நகைக்கடையில் ஏற்பட்ட கொள்ளை சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட வருகின் றனர். மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை, மாரியா புரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி சாந்தா மணி (43), காரமடை பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், சாந்தாமணி வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அடுத்த நாள் காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டதை அருகில் இருந்த வர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சாந்தாமணி மற்றும் செந்தில் ஆகியோர் வந்து பார்த்தபோது, கடையிலிருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந் ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காரமடை காவல் துறையின் சம்பவ இடத்திற்கு வந்து, கை ரேகை நிபுணர்களை வைத்து, அங்கு பதிவாகியிருந்த கைரே கைகளை பதிவு செய்தனர். இதற்கிடையே காரமடை காவல் ஆய்வாளர் குமார், கடையிலிருந்த பொருட்களை பரிசோதனை செய்யும்படி உரிமையாளரிடம் கூறினார். இதையடுத்து செந்தில், சாந்தா மணி ஆகியோர் கடையிலிருந்த தங்க நகை மற்றும் வெள்ளி யை சரிபார்த்தனர். அப்போது திடீர் திருப்பமாக திருட்டு போனதாக கூறப்பட்ட அரை கிலோ தங்க நகை கடையின் லாக்கரில் பத்திரமாக இருந்தது. 13 பவுன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் மட்டும் திருடு போயிருந் தது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் உதவி ஆய்வா ளர்கள் பாண்டியராஜ், செல்வநாயகம், சுல்தான் இப்ராகிம் உள்ளிட்ட காவலர்கள் கொண்ட 3 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படையினர் கடை மற்றும் அந்த பகுதிகளில் பொருத் தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சாந்தாமணி கடையிலிருந்த கண்கா ணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய முற்பட்டபோது, அதிலிருந்த ஹார்டிஸ்கை கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும், கொள்ளையர்கள் அந்த பகுதி யிலிருந்த சில கண்காணிப்பு கேமராக்களில் தங்கள் முகம் தெரியாமல் இருக்க மறைக்க முயற்சி செய்துள்ளனர். மற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக காட்சியில் கொள்ளையர்கள் 3 பேர், இருசக்கர வாகனத்தில் வந்து செல்வது பதிவாகிருந்தது. இதையடுத்து போலீசார் அதில் பதிவாகியிருந்த உருவங்களை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
55 ஆவது தேசிய நூலக வார விழா
தருமபுரி, நவ.21- தருமபுரியில் 55 ஆவது தேசிய நூலக வார விழா மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில், வாசகர் வட்டம் சார் பில் 32 வார வாசிப்போம், நேசிப்போம் பயிலரங்க நிறைவு விழா, புதிய நூல்கள் கண்காட்சி மற்றும் 55 ஆவது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமை வகித்து பேசுகையில், அறிவு சார்ந்த சமுதாயம் உருவகுவதற்கு வாசிப்பு பழக்கமான படிப்பு மட்டுமே சிறந்ததாக இருக்கும். புத்தகங்களை படித் தால் மட்டுமே அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை அனைவரும் அறிந்து கொண்டு, புத்த கங்கள் படிக்கும் வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவ, மாணவியர்கள் தங்கள் பள்ளி, கல்லூரி படிப்பு காலத்தில் மட்டுமல்லாமல் கைப்பேசியினை தேவையற்ற விஷயங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்த்து வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டால் வாழ்வில் நிச்சியம் வெற்றியடைய முடியும், என்றார். இவ்விழாவில் மாவட்ட நூலக அலுவலர் மா.தனலட்சுமி, தருமபுரி தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் இரா.செந்தில், தருமபுரி வருவாய் வட்டாட்சியர் தன.ராஜராஜன், நெடுஞ் சாலைத்துறை தனிவட்டாட்சியர் ச.அதியமான், வாசகர் வட் டத் தலைவர் சி.இராசசேகரன், தருமபுரி அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் கு.சிவப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தனியார் மருத்துவமனையில் தாய் உயிரிழப்பு: 2 மாத கைக் குழந்தையுடன் பெற்றோர் தர்ணா
கோவை, நவ.21- அன்னூர் அருகே தனியார் மருத்துவமனையில் தாய் உயிரிழந்த நிலையில், அதற்கு காரணமானவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்த பெண் ணின் பெற்றோர் 2 மாத கைக் குழந்தையுடன் தர்ணாவில் ஈடு பட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்களது மகள் வான்மதி (21). இவர் நிறைமான கர்ப்பிணியாக இருந்தபோது பிரசவத்திற்காக கடந்த செப்.19 ஆம் தேதியன்று அன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். அப்போது திடீ ரென மின்தடை ஏற்பட்டதால், வான்மதியை ஆபத்தான நிலை யில் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின் அவர் இறந்துவிட்டதாக தகவல் தெரி வித்தனர்.இதன்தொடர்ச்சியாக பொதுமக்கள் எங்களுக்கு ஆதரவாக நியாயம் கேட்டு மருத்துவமனையில் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து கோவில்பாளையம் காவல் துறையினர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலி யர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால், குழந்தை பிறந்த இரண்டு மாதங்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, உரிய இழப்பீடு வழங்கி, மாவட்ட நிர்வாகம் இந்த குழந்தையின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், என்றனர்.
சொத்துவரியை செலுத்தாவிட்டால் சீல் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
திருப்பூர், நவ.21- நவம்பர் 30 ஆம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தா விட்டால் வணிகக் கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என காங்கயம் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங் கடேஷ்வரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: காங்கயம் நகராட்சிப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக் கும் மேலாக குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 33 குடியிருப்பு களின் குடிநீர் இணைப்பு கடந்த ஒரு வாரத்தில் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், சொத்துவரி செலுத்துவதற்கு இம்மாதம் 30 ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்குள் சொத்து வரியை செலுத்தாவிட்டால், எந்தவித முன்னறிவிப்புமின்றி குடிநீா் இணைப்பு துண்டிப்பு மற்றும் வணிகக் கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும். வரி செலுத்தாதவா்களின் பெயர்ப் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும். எனவே, மேற்கண்ட நடவடிக்கைகளை தவிர்ப்பதற்கு காங்க யம் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையால் மகசூல் பாதிப்பு
திருப்பூர், நவ.21- உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் தக்காளி, மிள காய், பீட்ரூட், வெண்டை, கத்தரி உள்ளிட்ட காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதாலும், ஈரப்பதத்தாலும் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:- மழைக்குப் பின் நிலவி வரும் குளிர்ந்த வானிலை என்பது பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற பருவநிலையாக இருக்கும். தற்போதைய நிலையில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இலைகளின் அடியில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் வாய்ப்பு உள்ளது. இவை இலையில் உள்ள சாற்றை உறிஞ் சுவதோடு பூஞ்சணங்கள், வைரஸ், பாக்டீரியா, மைக்கோ பிளாஸ்மா போன்ற சில நோய்க் கிருமிகளையும் செடிக ளுக்குள் செலுத்தி பலவிதமான நோய்களை உருவாக்குகின் றன. எனவே பூச்சி தாக்குதல் அறிகுறி தென்படாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பொதுவாக பயிர் சாகுபடி செய்யும்போதே தட்டைப் பயறு, மக்காச்சோளம் போன்ற கவர்ச்சிப் பயிர்களை வரப்புப் பயிராக நடவு செய்து சாறு உறிஞ்சும் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். மேலும் இவற்றின் இயற்கை எதிரிகளான பொறி வண்டுகள் வளர்வதற்கேற்ற சூழலை உருவாக்கலாம். வெள்ளை ஈக்கள் தென்னையில் மட்டுமல்லாமல் பப்பாளி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட 300 விதமான பயிர்களில் சேதத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். அவற்றைக் கட்டுப்படுத் துவதற்கு ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தும் போது அவற்றின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பலமடங்கு வீரியத்துடன் பெருகும் சூழல் உருவாகலாம். எனவே இயற்கை முறையில் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தி அவற்றை கவர்ந்து அழிக்கலாம். மேலும் அசுவினி, தத்துப்பூச்சி, மாவுப் பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப் பெண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதவீதம் ஏக்கருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்க லாம். பூச்சிகளின் பாதிப்பு அதிக அளவில் தென்பட்டால் தோட் டக்கலைத் துறையினரின் பரிந்துரை பெற்று ரசாயன மருந்து களைப் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
பொலிவு பெற்ற திருப்பூர் பேருந்து நிலையம் காணொலியில் முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
திருப்பூர், நவ. 21 - சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் புதுப்பொலிவுடன் கட்டப்பட் டுள்ள திருப்பூர் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட நான்கு கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கிறார். திருப்பூரில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம் பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, மீண்டும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் பணிகள் நிறைவ டைந்து உள்ளது. அதேபோல ரூ.19 கோடி மதிப்பீட்டில் பல அடுக்கு வாகன நிறுத்தும் கட்டிடம், ரூ.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை மற்றும் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பூ மார்க்கெட் உள்ளிட்டவையும் கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்ளது. இவற்றை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கிறார். இதையடுத்து அந்த பகுதிகள் தூய்மை செய்யப் பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
ரூ.25 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, நவ.21- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடை பெற்ற நிலக்கடலை ஏலத் தில் ரூ.25 லட்சத்திற்கு வர்த்த கம் நடைபெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், 650 மூட்டைகள் வந்திருந் தன.குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ. 7,500 முதல் ரூ.7,650 வரையி லும், இரண்டாவது ரக நிலக் கடலை ரூ.6,900 முதல் ரூ. 7,000 வரையிலும், மூன்றா வது ரக நிலக்கடலை ரூ. 6,400 முதல் ரூ.6,600 வரை யிலும் ஏலம் போனது.மொத் தம் ரூ.25 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 7 வியா பாரிகள், 60 விவசாயிகள் பங் கேற்றனர்.
பனிப்பொழிவால் மல்லிகை பூ வரத்து பாதிப்பு
திருப்பூர், நவ.21- திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு 1.5 டன் மல் லிகை பூ விற்பனைக்கு வரும். நல்ல வருவாய் கிடைப்பதுடன் விரைவாக விற்றுத்தீர்ந்து விடுவதால் மொத்த வியாபாரிகள் பலர் மல் லிகை பூ வாங்கி, விற்பதில் ஆர்வம் காட்டுகின் றனர். இரவு, அதிகாலையில் பனி தூறல் மழை போல பொழிகிறது. திருப்பூர் மார்க்கெட் டுக்கு மல்லிகை பூ வழங்கி வரும் சத்தியமங் கலம், திண்டுக்கல், சேலம்,ஓசூர் பகுதியில் பனி அதிகரிப்பால், செடிகளில் மொட்டுக்கள் மலர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மல்லிகை பூக்கள் வரத்து பாதிக் கப்பட்டுள்ளது. டன் கணக்கில் பூக்கள் வந்த மார்க்கெட்டுக்கு மொத்தம், 350 கிலோ மல் லிகை பூ மட்டும் வருவதால் சீசன் இல்லா விட்டாலும், தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ, 1,200 ரூபாய்க்கு மல்லிகை விற்கப்ப டுகிறது. முல்லை, 600 ரூபாய், செவ்வந்தி 120, அரளி 150 ரூபாய்க்கு விற்றது.பூ வியாபாரி கள் கூறுகையில், பனி குறைந்து விட்டால், ஓரிரு நாளில் நிலை சரியாகும், என்றனர்.
சாலை பணிகளால் போக்குவரத்து நெரிசல்
திருப்பூர், நவ.21- திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலையில் சாலை பணிகள் நடைபெறுவதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் - பல்லடம் சாலை தென்னம்பா ளையம், டி.எம்.சி., காலனி அருகே சாலை யின் குறுக்கில் சிறுபாலம் கட்டி மழை நீர் மற்றும் கழிவு நீர் அருகேயுள்ள ஓடைக்கு செல்லும் வகையில் பணிகள் கடந்த 20 நாட்க ளாக நடந்து வருகிறது. முக்கிய சாலை என் பதால் போக்குவரத்து சிரமம் ஏற்படாத வகை யில் பணிகளை விரைந்து முடிக்க அதிகா ரிகள் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில் சாலையின் ஒரு புறம் இப்பணிகள் முடிந்து, மறுபுறம் நடந்து வருகிறது. தற் போது திருப்பூரை நோக்கி செல்லும் சாலை முழுவதுமாக இப்பணிக்காக பேரிகார்டு மூலம் வாகனங்கள் செல்ல தடை செய்யப் பட்டுள்ளது. இதனால், திருப்பூரை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் ஏ.பி.டி., ரோடு வழியாக திருப்பி விடப்பட்டு வரு கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற் படுகிறது. மாலை, இரவு நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகி றது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வீட்டு மனையைக் காணவில்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார்
ஈரோடு, நவ. 21- தான் வாங்கிய வீட்டுமனையை வேறு பெயரில் விற்க முயல்வதை நிறுத்தி வைக்குமாறு திண்டல் பகுதியைச் சகோ தரர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், சலங்கபாளையம் கிரா மத்தில் ஈஸ்வரன் என்பவர் வீட்டுமனை விற்பனை செய்து வந்தார். அன்பு நகர் எனப் பெயரிடப்பட்டிருந்த அப்பகுதி யில் திண்டலைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய சகோதரர்கள் 1997ல் இரண்டு வீட்டுமனைகள் வாங்கி னர். இந்நிலையில் தற்சமயம் அந்த இடத்தை கவுந்தப் பாடி கிராமம், காட்டுவலசைச் சேர்ந்த கே.சி.கணேசன் ஓம் சக்தி நகர் என பெயர் மாற்றி சைட்டுகளைப் பிரித்து விற் பனை செய்துள்ளார். இதன் கிரயத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இது குறித்து பொது விசாரணை நடத்த வேண்டும் என்றும் திண்டல் சகோதரர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மேலும், விசாரணை நடக்கும் போது தன் கட்சிக்காரர்களை யும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆவின் பாலகம் அமைக்க மானியம் பெற அழைப்பு
ஈரோடு, நவ.21- ஆவின் பாலகம் அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தாட்கோ தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் பொரு ளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகை யில் ஆவின் பாலகம் அமைக்க ரூ.90 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற 18 வயது முதல் 65 வய துக்கு உள்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் இனத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்பத்தி னர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானி யம் எதுவும் பெற்றிருக்க கூடாது. ஆவின் பால கம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் கடை யின் இடம் குறைந்தபட்சம் 100 சதுர அடி யாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சொந்த, குத்தகை, வாடகை கட்டடம் இருக்கலாம். அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண் ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப் பித்தவுடன் அந்தந்த மண்டல அலுவலகத் தின் பொதுமேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் கடையை மதிப்பீடு செய்து, ஒதுக் கீட்டு உத்தரவை வழங்குவர். விண்ணப்பதாரர் உரிய ஆவணங்களு டன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் 6 ஆவது தளத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0424 2259453 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல், நவ.21- நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் டிச.9 ஆம் தேதியன்று ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. அதுசம யம் மாவட்டத்திலுள்ள ஓய் வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் குறைகள் ஏது மிருப்பின் அக்குறைகள் குறித்த விண்ணப்பங்களை தேவையான இணைப்புக ளோடு 3 பிரதிகளில் நவ.28 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளருக்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இக்கூட்டத்திற்கு முன் னதாக டிச.7 ஆம் தேதியன்று காலை 11.30 மணிக்கு துறை அலுவலர்களோடு நாமக்கல் மாவட்ட ஓய்வூதியர் சங்க பிர திநிதிகளும் கலந்து கொள்ள லாம்.