districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மது அருந்துவதை தட்டிக்கேட்ட  மனைவி கொலை-கணவரும் தற்கொலை

அன்னூர், ஜூன் 28- மது அருந்துவதை தட்டிக்கேட்ட மனைவியின் கழுத்தை  அறுத்து கொலை செய்து விட்டு கனவரும் தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.   கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள முகா செம் சம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(28). இவருக்கு சூர்யா என்கிற மனைவியும்(26), அகில்தர்சன்(9) என்ற மகனும், கீர்த்தனா (4) என்கிற மகளும் உள்ளனர். கடந்த 25 ஆம் தேதி சூர்யா தனது தந்தை ஆறுமுகத்திற்கு போன்  செய்து கணவர் குடிபோதையில் தன்னை அடிப்பதாகவும், தன்னை அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார்.  இதனைடுத்து, செவ்வாயன்று காலை ஆறுமுகம் முகா  செம்சம்பட்டிக்கு சென்று தனது மகளையும்,பேரக் குழந்தை களையும் பொன்னேகவுண்டன்புதூருக்கு அழைத்து வந் துள்ளார். இந்த நிலையில் சந்தோஷ்குமார் தனது மாமனார்  வீட்டிற்கு புதனன்று காலை வந்துள்ளார்.  அப்போது,மாமனார் ஆறுமுகம் வேலைக்கு சென்று விட்டார். மாமியார் தெய்வானை அருகில் உள்ள இறைச்சி  கடைக்கு சென்றுள்ளார்.மகனும், மகளும் அருகில் விளை யாடிக் கொண்டிருந்துள்ளனர்.  சூர்யா சமையலறையில் இருந்த போது சந்தோஷ் குமார் உள்ளே சென்று சூர்யாவிடம் வாக்குவாதத்தில்  ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, இறைச்சி கடைக்கு சென்ற  தெய்வானை வீடு திரும்பி வந்து பார்த்த போது, கழுத்து  அறுபட்ட நிலையில் சூர்யா ரத்த வெள்ளத்தில் இறந்து  கிடந்துள்ளார். அதன் அருகிலேயே மின்விசிறி கொக்கி யில் சந்தோஷ்குமார் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந் துள்ளார்.  இதை பார்த்த ஆறுமுகம், தெய்வானை மற்றும்  குழந் தைகள் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து அறிந்த   மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி, அன்னூர் இன்ஸ் பெக்டர் நித்யா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கோவையிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் வந்து ஆய்வு ஆய்வு மேற்கொண்டனர். மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அறிந்து  சுற்றுவட்டார பகுதிகளைச்சேர்ந்த மக்கள் மற்றும் உறவி னர்கள் அந்த வீட்டின் முன் குவிந்தனர். இருவரது சடலத்தை யும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மனைவியை கொலை செய்து விட்டு கணவனும் தற் கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களி டையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லில் முதல்முறையாக இயற்கை எரிவாயு நிலையம் துவக்கம்

நாமக்கல், ஜூன் 28- நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறை யாக இயற்கை எரிவாயு நிலையம் ராசிபுரம்  பேருந்து பழைய நிலையம் அருகே தொடங் கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஏற்றார் போல் தற்போது, நான்கு சக்கர வாகனங் கள் பயோ கேஸ், சிஎன்ஜி உள்ளிட்ட இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்பட்டு வரு கின்றன. இந்நிலையில், நாமக்கல் மாவட் டத்திலேயே முதல்முறையாக ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே இயற்கை  எரிவாயு நிலையம் (CNG BUNK) திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் இந்துஸ்தான் பெட்ரோலியம் சேலம் பொது  பிரிவு மேலாளர் அமரேஸ்வரர் ராவ் கலந்து  கொண்டு, நிலையத்தை திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து சிஎன்ஜி கேஸ்  சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளாகவும்,  பெட்ரோல், டீசலை விட அதிக மைலேஜ்  திறனை, குறைந்த விலையில் இயற்கை  எரிவானது வழங்கி வருகிறது. திருச்சி  மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அடுத்த  3 ஆண்டுகளுக்குள் 70 இயற்கை எரி வாயு நிலையங்கள் அமைக்கப்பட்ட உள்ள தாக அமரேஸ்வரர் ராவ் தெரிவித்தார். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எரிவாயு மூலம் செயல்படும் வாகன  உரிமையாளர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி மற்றும் பாராட்டுகளை தெரிவித் தனர். இந்நிகழ்ச்சியில், தனியார் பங்கு உரி மையாளர்கள் மற்றும் நாமக்கல் பேருந்து சங்கத்தலைவர் ஜோதி குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆந்திர மாநில போலீசாரின் காட்டு மிராண்டித்தனம் குறவர்கள் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன் 28- ஆந்திர மாநில போலீசாரின் காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கையை கண்டித்து ஈரோட்டில் தமிழ்நாடு குறவன், மலைக்குறவன் மற்றும் கொறவர்கள் சங்க  கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், புலியாண்டி பட்டி (ஊத்தங்கரை) பகுதியைச் சார்ந்த 9-  நபர்கள் (5-பெண்கள், 3-ஆண்கள், 7 -வயது  ஆண் குழந்தை ) உட்பட குறவர் இனத்தைச் சார்ந்த நபர்களை ஆந்திர மாநிலம், சித்தூர்  நகர காவல்துறை சட்ட விரோதமாக பிடித்து  சென்றனர். சித்தூர் காவல் நிலைய எல்லை யில் வைத்து பெண்களை வன்புணர்வு செய் தும், சித்தரவதை செய்தும், பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவியும்,  இரும்பு கம்பியால் குத்தியும், மிகவும் கொடூர மாக தாக்கியுள்ளனர். ஆந்திர மாநில போலீ சாரின் இந்த காட்டு மிராண்டித்தனமான நடவ டிக்கையைக் கண்டித்து ஈரோடு காளை மாடு  சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  ஆர்ப்பாட்டத்திற்கு இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேலம் கொ.செல்வ ராஜ் தலைமை ஏற்றார். இதில், திரளானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப் பினர்.

பெண் வழக்கறிஞர்களுக்கு தனி அறை

உதகை, ஜூன் 28- உதகை, காக்காதோப்பு பகுதியில் செயல் பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில், பெண் வழக்கறிஞர்களுக்கான தனி  அறை திறக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை, காக்கா தோப்பு பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  திறக்கப்பட்டது. அங்கு பெண் வழக்கறிஞர் களுக்கு என தனி அறைகள் இல்லாததால்,  அவர்கள் சிரமமடைந்து வந்தனர்.  இந்நிலையில், நீலகிரி மாவட்ட வழக்கறி ஞர்கள் சங்கத்தின் முயற்சியால், தற்போது ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண்  வழக்கறிஞர்களுக்கு என தனி அறை ஒதுக் கப்பட்டது. இதனை நீலகிரி மாவட்ட நீதிபதி அப்துல் காதர் திறந்து வைத்தார். இதில்  மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், நீதிபதிகள்  லிங்கம், ஸ்ரீதர், நீலகிரி மாவட்ட வழக்கறி ஞர்கள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

திருப்பூர் ஏ.டி.எஸ்.பி-க்கு பிடிவாரண்ட்

திருப்பூர், ஜூன் 28 -  திருப்பூர் ஏ.டி.எஸ்.பி.க்கு ஊட்டி மகிளா நீதிமன்றம் பிடிவா ரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த தோவாளா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு  பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கு  விசாரணை நடைபெற்றது. அதில் அப்போதைய டி.எஸ்.பி  யாக இருந்த கிருஷ்ணசாமி தொடர்ந்து 15 வாய்தாவிற்கு ஆஜ ராகாமல் இருந்தார். இதையடுத்து மகிளா நீதிமன்ற நீதிபதி  ஶ்ரீதர், கிருஷ்ணசாமிக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தர விட்டார். கிருஷ்ணசாமி தற்போது திருப்பூர் மாவட்டத்தில் ஏ.டி‌.எஸ்.பியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து 7 வயது சிறுவன் பலி, தாய், தந்தை படுகாயம்

தாராபுரம், ஜூன் 28 - தாராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஈச்சர் வேன்  மோதிய விபத்தில் 7 வயது பள்ளி சிறுவன் பலியானார். தாய்,  தந்தை இருவரும் பலத்த காயமடைந்தனர். சேலம் மாவட்டம், பச்சபட்டி, அசோக் நகரை சேர்ந்த அப் துல் நவ்பில் (32) இருசக்கர வாகன சீட்கவர் தயாரிக்கும் தொழி லாளி. இவருடைய மனைவி நிலோபர் நிஷா (28) இவர்களது  மகன் முகமது நவ்பில் (7) (சேலம் அரசு பள்ளியில் 2 ஆம்  வகுப்பு படித்து வந்தார். இவர்கள் மூவரும் சம்பவத்தன்று காலை தாராபுரம் பகுதியில் வசிக்கும் தங்கை பானு வீட்டிற்கு  வருவதாக கூறி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு ஈரோடு, காங் கேயம் வழியாக  தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.  அப்போது காங்கேயம் பிரிவு சாலை அருகே தாராபுரத்தில் இருந்து இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி  வந்து கொண்டிருந்த ஈச்சர் வேன் மோட்டார் சைக்கிள் மீது  பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் அப்துல் நவ்பில்,  மனைவி நிலோபர் நிஷா மற்றும் மகன் முகமது நவ்பில் ஆகிய  மூவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். அப்போது  சிறுவன் முகமது நவ்வில் தலையில் பலத்த காயம் அடைந்து  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த தாராபு ரம் போலீசார் சம்பவத்திற்கு வந்து மூவரையும் மீட்டு தாராபு ரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். படுகாயம்  அடைந்த கணவன் மனைவி இருவரையும் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இறந்து போன  சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்ப டுத்திய ஈச்சர் வேன் ஓட்டுநர் விருதுநகர் மாவட்டம் முள்ளி  சேவல் பகுதியை சேர்ந்த சங்கர பாண்டியனை கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை சாக்லெட் விற்றவர் கைது

அவிநாசி, ஜூன் 28- அவிநாசியில் போதை (கஞ்சா) சாக்லெட் விற்றவரை போலீசார் செவ்வாயன்று கைது செய்தனர். அவிநாசி அருகே அணைப்புதூரில் கஞ்சா சாக்லெட்  விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவயிடத்துக்கு சென்ற போலீசார் அப்பகுதி யில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ராஜஸ் தான் மாநிலத்தை சேர்ந்த லட்சுமணபட்டேல் (42) என்பவர் விற்பனைக்காக கஞ்சா சாக்லெட் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணபட்டேலை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 6 கிலோ கஞ்சா சாக்லெட்களை பறிமுதல் செய்தனர்.

ரூ. 1.84 கோடிக்கு பருத்தி ஏலம்

தாராபுரம், ஜூன் 28 - மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 1.84 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட முதுநிலை செயலாளர் சுரேஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கருர், திருச்சி, திண் டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 898 விவ சாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த னர். அதேபோல் பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர்,  திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிக பட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 7 ஆயிரத்து 321  க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ. 5 ஆயிரத்து 800 க்கும்  சராசரி விலையாக ரூ. 6 ஆயிரத்து 650 க்கும் விலை போனது.  மொத்தம் 9081 மூட்டைகள் 2 ஆயிரத்து 839 குவிண்டால் பருத்தி  ரூ. 1 கோடியே 84 லட்சத்து 48 ஆயிரத்து 651 க்கு விற்பனையா னது. இந்த ஏலத்தில் 22 வணிகர்கள் பங்கேற்றனர். ஏலத்திற் கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்தி ருந்தார்.

23 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்

திருப்பூர், ஜூன் 28 – திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் 23 வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செவ்வாயன்று பிறப்பித் துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் நூறு நாள் வேலை திட்ட வட்டார  வளர்ச்சி அலுவலராக இருந்த எம்.ரமேஷ்குமார், மாவட்ட நிர் வாக கண்காணிப்பாளர், தணிக்கைப் பிரிவு உதவி இயக்கு நர் அலுவலகத்திற்கும், அங்கு வேலை செய்து வந்த எஸ். பியூலா எப்சிபாய் குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலரா கவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதேபோல் பி.சாதிக் பாட்சா ஊரக வளர்ச்சி முகமையில் நூறு நாள் வேலை திட்ட  பிடிஓவாகவும், கே.சரவணன் ஊத்துக்குளி வட்டாரத்திற்கும், என்.சுரேஷ்குமார் குண்டடம் வட்டாரத்திற்கும், க.பிரியா பல் லடம் வட்டாரத்திற்கும், எஸ்.ரமேஷ் வெள்ளகோவில் வட்டா ரத்திற்கும், கே.வேலுச்சாமி திருப்பூர் வட்டாரத்திற்கும், எஸ். ஜோதி உடுமலை வட்டாரத்திற்கும், ஏ.ஜோதிநாத் திருப்பூர்  வட்டார கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக வும், டி.ஸ்ரீதர் மூலனூர் வட்டாரத்திற்கும், டி.எஸ்.பாலசுப்பிர மணியன் மூலனூர் கிராம ஊராட்சிகள் பிடிஓவாகவும், டி. வெங்கடேசன் குண்டடம் கிராம ஊராட்சிகள் பிடிஓவாகவும், எம்.கந்தசாமி பொங்கலூர் கிராம ஊராட்சிகள் பிடிஓவாக வும், வே.மீனாட்சி ஊத்துக்குளி வட்டார கிராம ஊராட்சிகள்  பிடிஓவாகவும், டி.சாந்திலட்சுமி மாவட்ட ஊராட்சிகள் உதவி  இயக்குநரக நிர்வாக பிடிஓவாகவும், பா.ராகவேந்திரன் காங்கேயம் வட்டாரத்திற்கும், எம்.விமலாவதி அவிநாசி வட் டாரத்திற்கும், கே.மனோகரன் பல்லடம் வட்டார கிராம ஊராட் சிகள் பிடிஓவாகவும், எம்.மகேஷ்வரன் வெள்ளகோவில் வட் டார கிராம ஊராட்சிகள் பிடிஓவாகவும், கே.ஆர்.எத்திராஜ்  மடத்துக்குளம் வட்டாரத்திற்கும், கே.செந்தில் கணேஷ்மாலா  குடிமங்கலம் கிராம ஊராட்சிகள் பிடிஓவாகவும், என்.சிவகுரு நாதன் தாராபுரம் வட்டார கிராம ஊராட்சிகள் வட்டார  வளர்ச்சி அலுவலரகாவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள் ளனர்.

பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு வீடுகள் அதிர்வதாக பொதுமக்கள் புகார்

ஈரோடு, ஜூன் 28- அம்மாபேட்டை காவிரி ஆற்றில் குடிநீர் திட்டப்பணிகளுக் காக பாறைகளை தகர்க்க வெடி வைக்கப்படுவதால், அப் பகுதியைச் சுற்றியுள்ள வீடுகள் அதிர்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை காவிரியாற்றின் மறு கரையில் சேலம் மாவட்டம், ராசிபுரம் - மல்லசமுத்திரம் கூட்டு  குடிநீர் திட்டப்பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக ஆற்றில் உள்ள பாறைகள் வெடி  வைத்து தகர்க்கப்படுகின்றன. மேலும், அதிக ஒலி எழுப்பும் பெரிய வெடிகள் வைப்பதாகவும், அதுபோன்ற நேரங்களில் கரையோரத்தில் உள்ள வீடுகள் அதிர்வதாகவும் அப்பகுதி மக் கள் கூறுகின்றனர். மறுகரையில் வெடி வெடிக்கும் போது பாறைகள் சிதறி ஆற்றின் நடுப்பகுதி வரை வந்து விழுவதாக வும், அதனால் குளிப்பவர்களுக்கும், மீன் பிடிப்பவர்களுக் கும் அச்சம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அம்மாபேட்டை பொதுமக்கள் கூறுகையில், கடந்த 2 மாதமாக ஆற்றின் மறுகரையில் குடிநீர் திட்டப்பணி கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே சேலம் மாவட்டம்,  எடப்பாடி அருகே காட்டூர் பகுதியில் ஒரு நீரேற்று நிலையம் இருக்கும் நிலையில், மீண்டும் அதே இடத்தில் ராசிபுரம் -  மல்லசமுத்திரம் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள் ளது. எந்த முன் அறிவிப்புமின்றி பாறைகளுக்கு வெடி வைக் கப்படுகின்றன. இதனால் நில நடுக்கம் ஏற்படுவதுபோல் வீடு கள் அதிர்கின்றன. சுவற்றில் விரிசல் ஏற்படுகின்றன. அடுக்கி  வைத்திருக்கும் பாத்திரங்கள் உருண்டு விழுகின்றன. மேலும், ஆற்றுக்குள் இறங்கி குளிக்க பயமாக உள்ளது.  மறுகரையிலிருந்து ஆற்றின் நடுப்பகுதி வரை கற்கள் விழு கின்றன. மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடிக்க அச்சப்படு கின்றனர். எனவே, குறைந்த அளவு ஒலி எழுப்பும் வெடி களையே பயன்படுத்த வேண்டும். அதேபோல் வெடி வைக்கும் போது பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும், என்றனர்.

அடிப்படை வசதி இல்லாத வட்டாட்சியர் அலுவலகம்

தருமபுரி, ஜூன் 28- பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத் தில் குடிநீர், கழிவறை ஆகிய அடிப்படை வச திகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக் குள்ளாகின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத் தில், 2 இரண்டு பேரூராட்சியும், 32 ஊராட்சி கள் உள்ளன. பாலக்கோடு நகரில் வட்டாட்சி யர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த வட் டாட்சியர் அலுவலக வளாகத்தில் சார்நிலை  கருவூல அலுவலகம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பொது இச்சேவை மையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், பொதுப் பணித்துறை கட்டடங்கள் பராமரிப்பு அலுவ லகம், வருவாய் அலுவலர் குடியிருப்பு ஆகி யவை உள்ளன. இந்த அலுவலகத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வருமான சான்று உள்ளிட்ட அரசின் நலத்திங் டங்கள் பெறவும், இ-சேவை மையத்தில் அர சின் நலத்திட்டங்கள் மற்றும் சான்றிதழ் பெற வும், பொதுமக்கள் விண்ணப்பிக்க தினந் தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல் கின்றனர்.  இந்நிலையில், அதிக அளவில் மக்கள்  வந்து செல்லும் இந்த அலுவலக வளாகத் தில் குடிநீர் இல்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் அவல நிலைக்கு தள்ளாப்பட்டு உள்ளனர். குடிநீருக்காக வைக் கப்பட்ட சின்டெக்ஸ் டேங்க் காட்சிபொரு ளாக உள்ளது. மேலும், வட்டாட்சியர் அலுவலக வளா கத்தில் இரு இடங்களில் கழிப்பறைகள் உள் ளன. இந்த இரு கழிப்பறைகளில் தண்ணீர் வச தியின்றி, பயன்பாடின்றி உள்ளன. இதனால்  பூதர்மண்டியுள்ளது. கழிவறை வசதி இல்லா ததால் வட்டாட்சியர் அலுவலக பின்புறமுத் தில் ஆண்கள் திறந்த வெளிளில் சிறுநீர்  கழிக்கின்றனர். இதனால் அலுவலகத்திற் குள் வருவோருக்கு தூர்நாற்றம் வீசுக்கின்ற னர். அலுவலகம் வரும் பெண்களுக்கு இயற்கை உபாதை கழிக்க வழியில்லை பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அலுவலக வளாகம் முறையாக சுத்தம் செய்யாமல் புதர் மண்டியுள்ளது. எனவே குடிநீர், கழிப்பறை வசதி செய்து  கொடுக்க வேண்டும். அலுவலக வளாகத் தில் பொதுமக்கள் அமர காத்திருப்பு அறை கட் டப்பட வேண்டும். அலுவலக வளாகத்தில் குப்பைகள் இல்லாமலும், கழிவுநீர் தேங்கா மல் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, ஜூன் 28- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல் வேறு மாவட்டங்களிலிருந்து பட்டுக்கூடுகளை விவசாயி கள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்கா டியில் செவ்வாயன்று நடை பெற்ற ஏலத்திற்கு 1,115 கிலோ பட்டுக்கூடு கொண்டு வரப்பட் டன. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.514க்கும், குறைந்தபட்சமாக ரூ.310க் கும் விற்பனையானது. மொத் தம் ரூ.4.65 லட்சத்திற்கு வர்த் தகம் நடைபெற்றது.