கோவை, டிச.8- டாப்சிலிப் வனப்பகுதியில் யானைகளுக்காக வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகள் மண்மூடி இருந்த அடையாளமே இல்லாமல் போயுள்ளன. கோவை மாவட்டம், வால்பா றையை அடுத்து அமைந்துள்ளது டாப்சிலிப். சுற்றுலா தலமான இந்த பகுதியில் யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. காடுகளிலி ருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் யானைகளை பிடிக்கும் வனத்துறையினர், இந்த டாப்சிலிப் யானைகள் முகாமில் அவற்றை பரா மரிக்கின்றனர். அவற்றிற்கு உண வும் இந்த முகாமில் வழங்கப் பட்டு வருகிறது. டாப்சிலிப் அமைந் துள்ள இடம் வனப்பகுதி என்பதால், இங்கு வளர்ப்பு யானைகளை கடந்து பல்வேறு வனஉயிர்களும் வசிக்கின்றன. கோடை காலங்க ளில் இந்த யானைகள் தண்ணீரை தேடி ஊருக்குள் வருவதாக புகார் கள் எழுந்தன. இதனையடுத்து டாப் சிலிப் வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்த தண்ணீர் தொட்டியில் வனத் துறையினர் தண்ணீரை நிரப்புவார் கள். காட்டு யானைகள் உட்பட வன விலங்குகள் இங்கு தண்ணீர் அருந்தி வந்தன. தற்போது இந்த தண்ணீர் தொட் டிகள் முறையான பராமரிப்பின்றி வைக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் தொட்டிகள் இருந்த தடமே இல் லாமல் மண் மூடி, அதில் செடிகள் முளைத்துள்ளன. இதனால் தண் ணீரை தேடி மீண்டும் வன விலங்கு கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரி விக்கின்றனர். எனவே, கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக தண்ணீர் தொட்டிகளை புனர மைத்து, அவற்றை தொடர்ந்து பரா மரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.