உடுமலை, மார்ச் 30- அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உடுமலை அருகே உள்ள அமராவதி அணை நான்கு டிஎம்சி கொள்ளளவு கொண் டது. அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட் டங்களில் சுமார் 54 ஆயிரத்து 640 ஏக்கர் நிலங் கள் பாசன வசதி பெறுவதுடன், வழியோர நூற்றுக்கணக்கான கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்தாண்டு தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் போது, சுமார் 18 டிஎம்சி வரை உபரி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. தற்போது, மழை குறைந்து, வெயிலின் தாக்கம் அதிக ரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அமராவதி அணையின் மொத்தமுள்ள 90 அடியில் 54.69 அடி தண்ணீர் உள்ளது . அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினா டிக்கு 71 கன அடியாகவும் உள்ளது. ஆண்டுதோறும் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டாலும், கோடை காலத்தில் அணையின் நீர்மட்டம் குறைந்து பெரும் சிக்கலை சந்திக்கிறது. ஆகவே, அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் புதிய தடுப் பணைகள் கட்டவும், பழைய தடுப்பணைகள் அனைத்தையும் புதுப்பித்து அதிக நீர் தேக்கும் வகையில் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், மழைக்காலங்களில் ஒரே நாளில் பல டிஎம்சி தண்ணீர் ஆற்றில் வெளி யேற்றபடுவதால் அவை வீணாகிறது. எனவே ஆற்றின் குறுக்கே தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைத்தால், மழைக்காலங் களில் கிடைக்கும் நீரை சேமித்து ஆண்டு முழு வதும் பயன்படுத்தமுடியும் என அப்பகுதி விவ சாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அமரா வதி அணையின் பாசனப்பகுதியில் மூன்று போகம் நெல் சாகுபடி இருந்தது. ஆனால், தற்போது அது ஒரு போகமாக குறைந்துள்ள தாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்ற னர்.