districts

img

மடைப்பகுதி உயரம் குறைவால் விளை நிலத்தில் பாய்ந்த தண்ணீர்

தருமபுரி, நவ.23- ஏரி மடைப்பகுதியை உயரம் குறை வாக கட்டியதால், விளைநிலத்தில் தண் ணீர் பாய்ந்து நெற்பயிர் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.  தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பந்தார அள்ளி கிராமத்தில் உள்ள ஏரி முழு  கொள்ளளவை எட்டிவுள்ளது. இந்த  ஏரிக்கு நீர் ஆதாரமாக விளங்குவது கிருஷ்ணகிரி அணை உபரி நீரும், மழைநீருமேயாகும். சுமார் 35 ஏக்கர் பரப் பளவு கொண்ட இந்த ஏரி நீண்ட நாட்க ளுக்கு பிறகு நிரம்பி உள்ளது. ஏரி நீரால்  அருகில் உள்ள நிலத்தில் பயிரிடப்பட் டுள்ள பயிர்கள் மூழ்கி நாசம் அடைந்த தாக விவசாயிகள் புகார் தெரிவித்த னர். இதைத் தொடர்ந்து ஏரியிலிருந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் ஊராட்சி நிர்வா கத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதை யடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி, வேளாண்மை உதவி இயக் குநர் புவனேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் சங்கரன், கிராம நிர்வாக அலு வலர் கதிரவன் ஆகியோர் சம்பந்தப் பட்ட ஏரிக்கு நேரில் சென்று பாதிக்கப் பட்ட பயிர்களை பார்வையிட்டனர். இவர்கள் ஏரியிலிருந்து நீர் திறக்க ஏற் பாடு செய்தனர்.  அப்போது பந்தாரஅள்ளி ஏரி சமீபத் தில் பெய்த மழையால் நிரம்பியிருக்கி றது. தண்ணீர் வெளியேறக்கூடிய ஏரி  மடைப்பகுதியை குறைவான உயரத் தில் கட்டியதால் கீழ் சவுளுப்பட்டி கிரா மத்திலுள்ள விளை நிலங்களில் தண் ணீர் புகுந்திருக்கிறது. அறுவடைக்கு தயாராக இருந்த நெல், அவரை, உள் ளிட்ட பயிர்கள் தண்ணீர் சூழ்ந்து சேதம டைந்துள்ளது. மேலும். கிணறுகளில் மண் சரிவு ஏற்பட்டு மின் மோட்டார்கள், ஆயில் இன்ஜின்கள் தண்ணீருக்குள் மூழ்கி பல்வேறு வகையில் பாதிப்பு ஏற் பட்டிருக்கிறது  எனவே மாவட்ட நிர்வாகம் சேதத் தைக் கணக்கீடு செய்து பாதிப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.