districts

img

தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றே ஒன்றிய அரசு நிதி அளிக்க மறுக்கிறது!

அழகு தமிழ் கொஞ்சுகின்ற  கோவையில் தான் தேசிய தலைவர் கள் பங்கேற்ற மாநில சுயாட்சிக்கான  கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட் டிற்கு பொருளாதாரத்தை ஈட்டி தருவ தும் கோவை தான். ஆங்கிலேயர்க ளால் மக்கள் இங்கு வாழ்வதற்கு  தகுதியில்லை என சொன்ன கோவை,  திராவிட அரசால் மக்கள் மானத்துடன்  வாழ்ந்து வருகின்றனர். வாக்களித் தாலும், வாக்களிக்காவிட்டாலும் கோவையை காக்க வேண்டும் என  முதல்வர் கட்டளையிட்டுள்ளார். ஆனால், ஒன்றிய அரசால் சுலபமாக நலத்திட்டங்களை செய்ய முடிய வில்லை. தமிழ்நாடு என்றால் வாக்க ளிக்க மாட்டார்கள் என நிதியை ஒன்றிய  அரசு கொடுப்பதில்லை. சட்டமன்றத் தில் மாநில அரசால் கொடுக்கப்பட்ட அறிக்கையை வாசிக்க முடியாது என  ஆளுநர் சொல்வதற்கு அதிகார மில்லை. மிக்ஜம் புயலில் இவ்வளவு நிதி தேவைப்படுகிறது, அவர்கள் தரு வார்கள் என நம்பிக்கையுடன் தெரிவித் தும், தவறாக எதுவும் குறிப்பிடாத போதும் கூட, ஆளுநர் தமிழக அரசின்  உரையை முழுமையாக படிக்க வில்லை. தமிழக முதல்வர் தனது சக்திக்கு மீறி செயல்பட்டுக் கொண்டி ருக்கிறார் என உயர் நீதிமன்றம்  சொல்லியுள்ளதாகவும், கலைஞர்  உரிமைத்தொகை திட்டம் மூலம்  1,15,00,000 பெண்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் பெறுகின்றனர். திமுக சொன்னது போல 1000 ரூபாய் தந்து விட்டோம், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய பாஜக அரசு சொன்ன 15 லட்சம் கொடுத்தார்களா?  திட்டக்குழு என்பதை கலைத்து  நிதி ஆயோக் என்பதை கொண்டு  வந்து, பொருளாதாரம், வேலை வாய்ப்பு என விவாதிக்காமல் அந்த அமைப்பை முடங்கியுள்ளனர். திட்டக் குழு இருந்தால் மாநில வளர்ச்சிக்கு பங்கு இருக்கும் என்பதாலேயே ஒவ்வொன்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே  அதை எடுத்துவிட்டார்கள். கார்ப்ப ரேட்டுகள் தகுந்தாற்போல் தான் சட்டத்தை அமைப்பதே ஒன்றிய அரசின் பணி. 2026 சட்டமன்ற தேர்த லுக்கான அடித்தளமான கோவை தொகுதியில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை ஏற்படுத்தி தர வேண்டும். இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்களுக்கு மட்டு மில்லை வருங்காலங்களில் தமிழர்க ளாக நாமும் பாதிக்கக்கூடிய வகை யில் சிஏஏ சட்டம் இருக்கும். ஏன் மக ளிர் உரிமைத்தொகை பறிபோகும் நிலை உருவாகும். கோவை கொடிசியா மைதானத் தில் நடைபெற்ற தேர்தல் பரப்பரைக்  கூட்டத்தில் மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி ஆற்றிய உரையிலி ருந்து…