உடுமலை, நவ. 12 – அமராவதி அணை நிரம்பியதால் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கையோடு இருக்க மாவட்ட நிர்வா கம் அறிவுறுத்தியுள்ளது. உடுமலை அமராவதி அணை மூலமாக திருப் பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 54 ஆயி ரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின் றன. மேலும் ஆற்றின் கரையோர கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. நடப்பாண் டில், தென்மேற்கு பருவ மழை காலத்தில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி அமராவதி அணை நிரம்பி யது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கி, அணை நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மூணாறு, தலையாறு, மறையூர் உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு பிரதான நீர்வரத்து ஆறுகளான பாம்பாறு, சின் னாறு, தேனாறு மற்றும் ஓடைகளில் நீர்வரத்து படிப் படியாக அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.
தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், நடப்பாண்டில் இரண்டாவது முறையாக, அமராவதி அணை நிரம்பியது. இத னையடுத்து அணைக்கு வரும் உபரிநீர் வெளியேற் றப்பட்டு வருகிறது. சனியன்று காலை நிலவரப்படி, அமராவதி அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில் 87.90 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநா டிக்கு 4650 கன அடியாகவும் இருந்தது. அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகா ரிகள் கூறியதாவது, நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிக ரித்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, தொடர்ந்து நீர்வரத்து கண்காணிக்கப்பட்டு, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவித் தனர். மேலும் அணைக்கு வரும் உபரி நீர்முழு வதும் ஆற்றில் திறக்கப்படும் வாய்ப்புள்ளதால், அமராவதி ஆற்றின் கரையோர கிராம மக்கள் எச்ச ரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவு றுத்தப்பட்டுள்ளது.