districts

உடுமலை வட்டாரத்தில் தொடரும் மின் கேபிள்கள் திருட்டு: விவசாயிகளுக்கு இழப்பு; கண்டு கொள்ளுமா காவல்துறை?

திருப்பூர், ஜூன் 7 - உடுமலை வட்டம், குடிமங்கலம் அருகே  விருகல்பட்டியில் விவசாய கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த 1000 அடி கொண்ட ஆழ்குழாய் மின் கேபிள்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக விருகல்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் எம்.ராதாகிருஷ்ணன், எம்.ஜெயச்சந்திரன் ஆகியோர் செவ்வாயன்று  குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விருகல்பட்டி கிராமத்தில், இருவருக்கும் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வரு கின்றனர். இந்நிலையில் திங்களன்று அதி காலை அந்த நிலத்திற்குச் சென்று பார்த்த போது அங்குள்ள ஆழ்துளைக் குழாய் கிணற் றில் இருந்தும், ஸ்டாட்டர் பெட்டியில் இருந் தும் பயன்படுத்திக் கொண்டிருந்த 1000 அடி  மின் கேபிள்களை அடையாளம் தெரியாத நபர் கள் திருடிச் சென்று விட்டனர். இதனால் விவசாயப் பணி பாதிப்பதோடு,  மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதா கவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.எனவே காவல் துறை தலையிட்டு உரிய  விசாரணை நடத்தி மின் கேபிளை திருடிய வர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க  தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். திரு டப்பட்ட தங்கள் ஆழ்குழாய் கேபிள்களை யும் மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர்கள்  கேட்டுக் கொண்டுள்ளனர். இதேபோல் உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விவசாய  இணைப்புகளுக்கு உரிய மின் கேபிள்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன. எனவே இந்த திருட்டை தடுப்பதுடன், விவ சாய பணிகள் பாதிக்காதவாறும், விவசாயிக ளுக்கு இழப்பு ஏற்படாதவாறும் தடுப்பதற்கு காவல் துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய  வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.